Tamil News Channel

Blog Post

Tamil News Channel > News > வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு..!

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு..!

வவுனியாவில் இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்தனர்.

ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள தனது வீட்டில்  இந்த  இளம் யுவதி  தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டதாக  சிதம்பரபுரம் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த யுவதியின் சடலம் இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *