உள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் வட்டாரங்களின் பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெற்ற நிலையில தற்போது வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைவாக, வவுனியாவில் மாநகர சபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவ் நிலையங்களில் காணப்பட்ட வாக்குப் பெட்டிகள் 56 வாக்கு எண்ணும் நிலையங்களின் வட்டார மையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.
Post Views: 16