வவுனியா – புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல்
மேற்கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில்
சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற நபர் ஒருவரினால்
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் வவுனியா
மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை
பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.