வாகரை பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன்!
வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர் தட்டமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்ததாவது,
இளம் மனைவியும் அவரது கணவரும் இடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகும்.
சடலம் நீதவான் விசாரணைக்கு பிறகு மட்டக்களப்பு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது. கொலை சம்பவத்துக்குப் பிறகு சந்தேக நபரான கணவர் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகரை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தில் 25 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெறுகிறான்.
![]()