போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நாடு முழுவதிலும் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் சுற்றிவளைப்புக்களில் பல போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களில் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த விசாரணைகளில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு வாட்ஸ் செயலி ஊடாக மாணவர்களுடன் தொடர்புகளை பேணி போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டுள்ளது
அந்நிலையில் சந்தேகநபர்களின் தொலைபேசிகளை பறிமுதல் செய்து இவர்களுடன் தொடர்புகளை பேணி வந்த மாணவர்களை இனம் காணும் நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.