Tamil News Channel

விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பம்..! 

IMG-20250315-WA0074

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட தொடர் கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத் தொகுதியின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

இன்றைய ஆரம்ப நாள் நிகழ்வு கரைச்சி பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் போல் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பத்மசிறீ கலந்து கொண்டு வீரர்களை அறிமுகம் செய்து போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.

18 கழகங்கள் குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts