கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தின் ஊடாக 635.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன .
இது 2024 ஆம் ஆண்டு ஜூனில் பெறப்பட்ட 519.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, 22 சதவீத அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிடைத்த 641.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, அனுப்பப்பட்ட தொகையானது சற்று குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



