November 17, 2025
வைத்தியசாலை மருந்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவலம்…!!
புதிய செய்திகள்

வைத்தியசாலை மருந்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவலம்…!!

Jul 15, 2024

மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட சிறுவர்கள் குழு ஒன்றுக்கே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை வைத்தியசாலையில் தேவையான மருந்தைப் பெற்றுக் கொண்டு பிள்ளைகளுக்கு மருந்தைக் கொடுத்த பின்னர் குழந்தைகளின் வாய் கோணி, நாக்கு வெளியேறி, கழுத்து வளைந்த நிலையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நோய்வாய்ப்பட்ட 6 முதல் 12 வயது வரையிலான 9 சிறுவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *