காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் 02 இராணுவ தளபதிகள் உட்பட 10 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசாவின் வடபகுதியில் செஜய்யாவில் உள்ள கட்டிடமொன்றின் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாகுதலின் போது , அங்கு இருந்த படையினரை காப்பாற்ற முயன்ற போதே இந்த படையினர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர்.
காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளதென ஹமாஸ் தெரிவித்துள்ளது.