டிஃபென்டர் பயன்படுத்தி இளைஞரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு இவ் வழக்கில் பிணை வழங்குமாறு கோரிய பிணை மனு மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்தார்.
எனவே, இந்த வழக்கை ஜூலை 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
Post Views: 2