Tamil News Channel

Blog Post

Tamil News Channel > News > 13 ம்  திருத்தச்  சட்ட அதிகாரங்கள் போதுமானது யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.

13 ம்  திருத்தச்  சட்ட அதிகாரங்கள் போதுமானது யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு.

13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவும் மத்திய அரசாங்கம் தலையிடாது எனவும் யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில்  நேற்றைய தினம் (04) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தற்போது மேல்மாகாணத்திற்கு மட்டுமே நிதி சுதந்திரம் காணப்படுவதாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *