181 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது !

0
2

கனடாவின் மொன்ட்ரியாவிலிருந்து டோஹா வழியாக இலங்கை வந்த ஒரு கனேடிய பெண், 181 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹஷிஷ் போதைப்பொருளுடன் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பின்னர், சந்தேக நபரின் சொத்துகளில் 18,123 கிராம் ஹஷிஷ் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here