ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒரு தீவில் வசிப்பவர்கள் தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு மத்தியில் தீவிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

1919 ஆம் ஆண்டு ஒப்பிடத்தக்க தரவுகள் கிடைத்ததிலிருந்து, வியாழக்கிழமை (நேற்று) ஏற்பட்ட குறைந்த 6 நிலநடுக்கம், தோஷிமா கிராமத்தில் இவ்வளவு தீவிரம் கொண்ட முதல் நிலநடுக்கம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (இன்று) காலை, தோஷிமா தீவுகளில் ஒன்றான அகுசெகிஜிமாவில் உள்ள தோஷிமா கிராமத்தில் வசிப்பவர்கள் கப்பல் மூலம் ககோஷிமாவில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு அணுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் தற்காலிக தங்குமிடத்தில் தங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நில அதிர்வு செயல்பாடு குடியிருப்பாளர்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
“நான் மிகவும் பயந்து போனேன், என் மகளைப் பிடித்துக் கொண்டேன். தீவில் இன்னும் குழந்தைகளும் மாணவர்களும் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்” என்று ஒரு பெண் குடியிருப்பாளர் கூறியுள்ளார்.
மற்றொரு பெண், “ஒரு மின் கம்பம் அல்லது தடுப்புச்சுவர் குலுங்குவதை நான் முதன்முறையாகப் பார்த்தேன். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
வெளியேற்றம் ஒரு வாரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது நிலநடுக்க செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடலாம் என கூறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அகுசெகிஜிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானிய அளவுகோலான பூஜ்ஜியம் முதல் 7 வரை 6 க்கும் குறைவான நில அதிர்வு தீவிரத்தை பதிவு செய்தது.
ரிக்டர் அளவுகோலில் 6 டிகிரி வரை அதிக அளவு நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.



