November 18, 2025
2025ல் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1.8 இலட்சம் பேருக்கு மேல் கைது – காவல்துறை தகவல்!!!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

2025ல் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1.8 இலட்சம் பேருக்கு மேல் கைது – காவல்துறை தகவல்!!!

Oct 18, 2025

2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் 15 வரை, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 1,81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் மிகப் பெரிய அளவில் போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி,

  • 1,426 கிலோ 543 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், 56,902 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • 14,292 கிலோ 393 கிராம் கஞ்சா  போதைப்பொருளுடன்  57,686 சந்தேகநபர்கள்,

  • 32 கிலோ 642 கிராம் கொக்கைன்  போதைப்பொருளுடன்  86 சந்தேகநபர்கள்,

  • 569 கிலோ 985 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 1,338 சந்தேகநபர்கள்,

  • மற்றும் ஐஸ் போதைப்பொருள் 2,538 கிலோ 866 கிராம் உடன் 65,542 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

காவல்துறை மேலும், நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வலையமைப்புகளை முறியடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *