விஞ்ஞானிகள் தெரிவிப்பதாவது, பூமியின் சுழற்சி வேகம் 2025ம் ஆண்டில் மேலும் அதிகரித்து வருகிறது, இது சில நாட்களில் நேரம் கணிசமாகக் குறைவதாக உணரப்படும் நிலையை உருவாக்கும்.
பொதுவாக, பூமி ஒரு நாளுக்கு 86,400 வினாடிகள் (24 மணி நேரம்) சுழலுகிறது. ஆனால் தற்போது பூமி சற்று வேகமாகச் சுழலுவதால், சில நாட்களில் இந்த நேரம் 1.3 முதல் 1.5 மில்லி வினாடிகள் வரை குறைவாக இருக்கிறது.
ஜூலை 9, ஜூலை 12 மற்றும் ஆகஸ்ட் 5, 2025 ஆகிய தேதிகளில் இந்த வேக அதிகரிப்பு மிகவும் குறித்த அளவில் அளவிடப்பட்டுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுழற்சி வேகம் தொடர்ந்து அதிகரித்தால், நாம் இன்று பயன்படுத்தும் அணு கடிகார அடிப்படையிலான நேர கணக்கீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம்.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுவதாவது:
“இந்த வேக மாற்றம் தொடர்ந்து இருந்தால், 2029ஆம் ஆண்டில் நாம் அரசியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக நேரத்திலிருந்து சில வினாடிகளை அழிக்க (negative leap second) வேண்டிய அவசியம் ஏற்படலாம்.”

இது மிகவும் அரிதான, ஆனால் உண்மை வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
வானிலை மையங்கள்,துல்லிய நேர மையங்கள்,தொலைதூர தொடர்பு அமைப்புகள் (telecom, internet), GPS கணித அமைப்புகள், நேர அடிப்படையிலான பங்குச் சந்தை அமைப்புகள்
இவை அனைத்தும், பூமியின் சுழற்சி வேகத்துக்கு நேர்த்தியான கட்டுப்பாடுகளை வைத்திருப்பதால், இந்த மாற்றம் மிகச் சிறியதாக இருந்தாலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும்.
இது ஏன் நடக்கிறது?
விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவதாவது, பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் பூமியின் உள் மைய இயக்கங்களில் மாற்றம் கடல் மற்றும் காற்றழுத்த ஓட்டங்களில் மாறுபாடு பூமியின் பனிப்பாகங்கள் உருகும் விதம் நிலநடுக்கங்கள், இயற்கைச்சுழற்சிகளினால் இது நடக்கிறது.
2025 இல் பூமியின் சுழற்சி வேகம் சாதாரணத்துக்கு மேலாகவே உள்ளது.
இந்த வேகம் தொடர்ந்து அதிகரிக்குமாயின், மிக விரைவில் நாம் பயன்படுத்தும் “நேரம்” என்ற கோட்பாட்டையே சீரமைக்க வேண்டிய நிலை உருவாகும்.
விஞ்ஞானிகள் தற்போது இதைக் கவனமாக கணிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
முன்னெச்சரிக்கையாக, இந்த மாற்றங்களை மீட்டமைப்பதற்கான சர்வதேச திட்டங்கள் (ஜன்னா, UTC நேர நிர்ணயம், உலகளாவிய நேர கணக்கீட்டு முறைமை) குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.



