இலங்கையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதனை கருத்தில் கொண்டு இலங்கையின் பொருளாதார பின்னடைவு மற்றும் ஸ்திரத்தன்மை அபிவிருத்திக் கொள்கையின் இரண்டாம் கட்டமாக 250 மில்லியன் டொலர்களை வழங்க தயாரகவுள்ளதாக உலக வங்கியானது கருத்து தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக பெயரிடப்பட்டுள்ள “RESET DPO”, வேலைத்திட்டத்திற்காக 2023 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டது.