ஜப்பான் ஏர்லைன்ஸ் A350 விமானம் கடந்த செவ்வாய்க் கிழமை (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளகியுள்ளது.
அந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது அங்கிருந்த மற்றொரு விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து ஏற்பட்டபோது உள்ளே இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.