70 பூனைகளை கொலைசெய்த நபர்..!
தென் கொரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் நபரொருவர் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.
குறித்த நபர் பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதன் காரணமாக பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பூனைகளை கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஆன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளார் என தென் கொரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மிகக் கொடூரமான விலங்கு கொடுமை வழக்குகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
![]()