எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஒன்பது நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இந்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் இம்மாதம் 18ஆம் திகதி தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்த கண்காணிப்பு குழுவில் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பு (SAARC) நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய பார்வையாளர்கள் அடங்குவர் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here