அந்நியச் செலாவணியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தாமல் வாகன இறக்குமதியை முறையான முறையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் , வாகன இறக்குமதிக்கு அதிக தேவை இருந்ததாகவும், இது தொடர்பான முந்தைய அமைச்சரவை தீர்மானம் குறித்தும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் அதிகாரத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் எந்தவொரு அவசர வாகன இறக்குமதியையும் அல்லது சலுகை இறக்குமதியையும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

“அந்நிய செலாவணியைப் பாதிக்காத அல்லது மற்றொரு டொலர் நெருக்கடியை ஏற்படுத்தாத முறையான அமைப்பின் கீழ் வாகன இறக்குமதியை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். வாகன இறக்குமதிக்கான தேவையை சமாளிக்கும் வழியை நாங்கள் பார்த்து வருகிறோம்,” என்றார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here