15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரப் பலகைகளை மல்லாவியில் இருந்து டிப்பர் வாகனத்தில் சட்டவிரோதமாக எடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை (15.12.2024) சாவகச்சேரிப் பொலிஸாரால் நாவற்குழிப் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








