போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கை..!!
நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் கூறியுள்ளார். பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல!!!..
சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல. சப்புகஸ்கந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய சபாநாயகர் சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் நேற்றையதினம் (11.12.2025) இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக
மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு..!!!
நுவரெலியா ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் நேற்று(11.12.2025) இரவு விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனை கூறியுள்ளார். தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் கற்பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுவதற்கு
இன்றைய நாளுக்கான வானிலை..!!
இன்று 12.12.2025 பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று (12.12.2025) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான
மருத்துவம் ஆரம்பம் டித்வா சூறாவளியின் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு..!!!
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பண்ணை விலங்குகளுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டற்காக, அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் நாளை(13.12.2025)முதல் மூன்று நாள் நடமாடும் மருத்துவமனையை மன்னாரில் தொடங்கவுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரஞ்சித் குமார இதனைத் கூறியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் நடந்த கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும் மேலும் அவர்
நிவாரணம் பகிர்ந்தளிப்பதில் கிராம சேவகர் சங்கம் குற்றச்சாட்டு..!!
அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது, சமூக அபிவிருத்தி குழுக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு எந்தவொரு சட்டரீதியான அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்று இலங்கை கிராம அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனர்த்தங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது கிராம அலுவலகர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட கயந்த கருணாதிலக்க..!!
நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று (11.12.2025) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு கட்டிடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமையவே கயந்த கருணாதிலக்க அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான காலத்தில்
அனர்த்த நிவாரண விநியோத்தில் ஏற்பட்ட முரண்பாடு வீடியோ குறித்து பொலிசார் கூறியது..!!!.
பொலீசாருக்கு எதிராக மந்தாரநுவர குடியிருப்பாளர்கள் போராட்டம் நடத்தியதாகக் கூறும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது குறித்து இலங்கை பொலீஸ் விளக்கம் கூறியுள்ளது. . பொலீஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்துப்படி, காவல்துறையினர் குடியிருப்பாளர்களுடன் மோதியதாகவோ அல்லது உதவி விநியோகத்தில் தலையிட்டதாகவோ தவறான விளக்கங்களுடன் இந்த காணொளி பரவப்பட்டுள்ளது. மந்தாரநுவர காவல்துறையின் பொறுப்பதிகாரி (OIC)யிடமிருந்து பெறப்பட்ட உள் அறிக்கையைத் தொடர்ந்து பொலீசாரால் விளக்கம்