கா/பொ/த சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மாவட்டத்தில் முதலிடம்!
2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு கல்வி வலயங்களில் செயல்படும் அனைத்து பாடசாலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பள்ளியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பலர் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க வகையில் 23 மாணவர்கள் 9A சித்திகளைப்
கிளிநொச்சி வலைப்பாடு பாடசாலையில் முதல் முறையாக 9A – வரலாற்று சாதனை படைத்த மாணவி!
தற்போது வெளியாகிய 2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பெறுபேறுகளில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மிக முக்கியமான வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேல் ஆன நிலையில், இப்பாடசாலையில் இருந்து முதன்முறையாக மாணவி அ. மேரி இசாயினி 9 பாடப்பிரிவுகளில் A தரங்களைப் பெற்று
வழமையான முறையில் நடாத்தப்படவுள்ள பரீட்சைகள்..!
2026இல் இருந்து முன்பு இடம்பெற்றது போன்று, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் வழமையான முறையில் நடாத்த முடியும் என பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர பிரதமரிடம் முன்வைத்த வாய்மொழி மூலமாக கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர்
யாழில் மழைக்கு மத்தியிலும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்..!
நாடளாவிய ரீதியில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25.11.2024) ஆரம்பமாகியது. இன்றையதினம் ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை 2 ஆயிரத்து 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இந்தமுறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 32 ஆயிரத்து 183 பரீட்சார்த்திகள் தோற்றும் நிலையில், வடக்கு மாகாணத்திலிருந்து 17 ஆயிரத்து 212 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி..!
நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முதல் ஆறு நாட்களுக்குத் தேவையான வினாத்தாள்கள் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு இன்று (23.11.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையானது 2, 312 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது. இந்த முறை
க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளையுடன் நிறைவு…!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை (19.11.2024) நள்ளிரவுடன் நிறைவடைய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம்
பெருந்தொகை பணம் செலவழித்தும் பயனற்றுப்போன கருத்தரங்கு…!
பொதுக் கல்வி நவீனமயமாக்கலின் கீழ் சிறுவர் புத்தகம் ஒன்றை அச்சிடுவதற்காக தேர்தெடுக்கும் கருத்தரங்கில் பங்குபற்றியிருந்த வளவாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு கொடுப்பனவாக பத்து இலட்சத்து 90 ஆயிரம் (10,89,546) ரூபா செலவிடப்பட்ட போதும் அந்த கருத்தரங்களில் ஒரு சிறுவர் புத்தகம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு அச்சிடப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கணக்கறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொகை பணத்தை செலவழித்து
மன்னாரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்த பின்தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள்…
மன்னார் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணப்படுகின்றது. குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மாத்திரம் காணப்பட்டது.இதனால் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களை தெரிவு செய்ய மாணவர்கள் அயல் பாடசாலைகளான நானாட்டான் மற்றும் முருங்கன் பாடசாலைகளுக்கு பஸ்ஸிலும்,துவிச்சக்கர வண்டியிலும் சுமார் 5 கிலோ
பல்கலைக்கழக அனுமதியை இழந்துள்ள 2941 மாணவர்கள்….!
கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக பல்கலைக்கழக ஒதுக்கீட்டு ஆணைக்குழு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதித்துள்ளது. அதன்படி, எஞ்சிய வெற்றிடங்கள் காரணமாக மாணவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த இரண்டு கல்வியாண்டுகளில் மட்டும் 2941 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 2020/2021 கல்வியாண்டில் 1857 மாணவர்களும், 2021/2022 கல்வியாண்டில் 1084 மாணவர்களும் பல்கலைக்கழக
பல்கலைக்கழகங்களில் பகிடிவதைச் சம்பவங்களுக்கு தடை….
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை இல்லாதொழிக்க சட்டமா அதிபர் தொடர் வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்விலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல்