Friday, May 22, 2026
No menu items!

புதிய செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதா கபால்மா இறக்குமதியாளர்கள் இன்று (20) உறுதிப்படுத்தினர். சமீபத்திய விலை திருத்தத்தின்படி, 450 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் பக்கெட்டின் விலை 125 விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ள செனட் சபை

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கும் வகையில் போர் அதிகாரத் தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்லும் பிரேரணையில், அமெரிக்க செனட் சபை நேற்று 50-47 என்ற வித்தியாசத்தில் இன்று (20) வாக்களித்ததுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 50 பேர் வாக்களித்ததோடு எதிராக (ட்ரம்புக்கு ஆதரவாக 47) 47 பேர்...

ஆடைக்குள் மறைத்து கடத்தப்பட்ட தொலைபேசிகள் மற்றும் மின்கலங்கள் பறிமுதல்!

பெருமளவிலான கைபேசிகள் மற்றும் மின்கலங்களைக் கடத்த முயன்ற சீன நாட்டினர் மூவரை ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நேற்று (19) கைது செய்தனர். இந்த நடவடிக்கையின்போது 5,140,000 ரூபாய் (சுமார் 51 இலட்சம்) மதிப்புள்ள கைபேசிகளும் 140 மின்கலன்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இவை சைபர் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட கூடியவை...

இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை; ‘கருப்பு’ தயாரிப்பு நிறுவனம்

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில், இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றுக்கான காப்புரிமைக்காக வழக்கு தொடர்வது போன்று ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி சர்ச்சையான நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக...

உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட திட்டம்!

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டிலேயே வாகனப் பதிவு எண்களை அச்சிட எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன பதிவு என் அச்சிடும் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுத் ஏசியன் டெக்னொலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம், வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்தில் ஏற்கனவே இயந்திரங்களை...

இலங்கை அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது!; ஜனாதிபதி அநுர

போரில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை பல குடும்பங்கள் இன்னும் சுமக்கின்றன என்றும் இதுபோன்ற துன்பங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற போர் வீரர்கள் நினைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை குறிப்பிட்டார். இராணுவத்தினர் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதை மாத்திரம் விரும்பவில்லை என்றும்,...

140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதை பொருள் பறிமுதல்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை பயணிகள் இருவரிடம் இருந்து 14.562 கிலோ குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட குறித்த குஷ் போதைப்பொருளின் சந்தை மதிப்பு ரூ.140.56 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இரு பயணிகளும் நேற்று காலை பேங்கொக்கிலிருந்து வந்துள்ளனர் எனவும் 23 மற்றும் 30 வயதுடையவர்கள் என்றும், கொழும்பில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்தவர்கள்...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திட்டம்

அண்மையில் பெய்த கனமழையால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. நெல்,சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை பயிர் செய்தவர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கமைய, பயிர் சேதமடைந்த விபரங்களை...

இபோலா தொற்றால் கொங்கோவில் 100 பேர் வரையில் உயிரிழப்பு!

கொங்கோவில் இபோலா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நாட்டில் 390-க்கும் மேற்பட்ட இபோலா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நோய்த் தொற்றின் காரணமாக, பொது சுகாதாரத்தைப் பேணுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் இன்றி,இபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இறுதிச்...

முதல்வர் விஜய்க்கு இயக்குநர் வெங்கட் பிரபுவின் அன்பளிப்பு

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு அரசியல் தரப்பினர் மற்றும் சினிமா துறையின் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு இன்று முதல் அமைச்சரை சந்தித்து அவருக்கு அன்பளிப்பொன்றை வழங்கியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய 'கோட்' திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய்யின் கார் இலக்கத் தகடு...
- Advertisement -

Latest News

கிரிக்கட் சபையின் நிதிப்பிரச்சினைகள் பாரதூரமானவை;எரான் விக்ரமரத்ன

இலங்கை கிரிக்கெட் சபையின் நிதிப் பிரச்சினைகள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டின் சீர்திருத்தக் குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் தனது...