Wednesday, July 1, 2026
No menu items!

புதிய செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு 53,000ஐ கடந்தது 

 ஜூன் மாத மழைக்கால சூழ்நிலையால் இலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 53,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, ஜூன் மாதம் மாத்திரம் 19,318 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனால் 2026 ஆம் ஆண்டின் 25ஆவது வாரம் வரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை...

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (27) குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து இந்த சம்பவம் பொலிஸாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் உடனடி...

சவூதி, பிரான்ஸ் விமான விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று ஏற்பட்ட இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபிய அரச எண்ணெய் நிறுவனமான சவூதி அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று நாட்டின் கிழக்கு கடற்கரையான ராஸ் தனுரா பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது இந்த விபத்தில் ஹெலிகொப்டரில்...

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட விரைவுத் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ், சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசிய செயலகம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர்...

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த நபர், மற்றொரு நபருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது, சந்தேகநபரின் தாயும் காயமடைந்த நிலையில் வீரகெட்டிய...

32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பேரிடரில் வெளியான மிகவும் நெகிழ்சியான மீட்பு சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது. சுமார் 32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். நீண்ட நேரம் சிக்கியிருந்தும்...

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த பேரழிவால் அதிக மக்கள் தொகை கொண்ட லா குயைரா கடற்கரை மாகாணம் முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு தலைநகர் கராகஸ் நகரம் முழுவதும் கட்டிடங்கள் பரவலாக இடிந்து விழுந்தன. இந்த நிலையில்...

 சுரேஷ் சாலே இருதய சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் (SIS) பணிப்பாளர் சுரேஷ் சாலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் இதயம் தொடர்பான உடல்நலக் கோளாறு காரணமாக சாலே சிகிச்சைக்காக அந்த பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். விசாரணைகளின் போது அவர் உரிய முறையில் நடத்தப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவில் முறைப்பாடு...

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சம்பவம் குறித்து பொதுபிட்டிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25-ம் திகதி இரு...

 62 கிலோவுக்கும் மேற்பட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை அடுத்து, 62 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் அழித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட 40 கிலோகிராம் ‘குஷ்’ எனப்படும்  போதைப்பொருளும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டதுடன், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அழிக்க உத்தரவிட்டிருந்த போதைப்பொருட்கள் என தெரிவிக்கப்படுகிறது. புத்தளம், வானாத்தவில்லுவ, லக்தோட்டையில் உள்ள விசேட...
- Advertisement -

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...