Sunday, August 16, 2026
No menu items!

புதிய செய்திகள்

ஹோட்டலுக்குள் சென்ற முதலை; வைரலாகும் காணொளி

பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் உள்ளே ஒரு முதலை சென்றமை தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. ஏரிக்கு அருகில் உள்ள குறித்த ஹோட்டலின் விருந்து மண்டபத்திற்குள் முதலை இருப்பது காணொளியில் பதிவாகியுள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் குறித்த முதலையை தோட்டம் மற்றும் ஏரிக்கு செல்லும் வாசல் வழியாக வழிநடத்திச் செல்வதும் காணொளி...

வரட்சியினால் சுமார் 68000 பேர் பாதிப்பு!

வறண்ட காலநிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவிக்கிறது. அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனஞ்சூரிய இது குறித்து கூறுகையில், 4 மாவட்டங்களில் உள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி...

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட அமுலாக்க பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் இது குறித்து கூறுகையில், ஒரு மாதத்திற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்றார். இது போன்ற குற்றங்களில் ஈடுபடும்...

எரிபொருள் விலையை குறைப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கம்; ஜே. டி வான்ஸ்

ஈரான் போரில் அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை அமெரிக்கர்களுக்கான எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலையை குறைவாக வைத்திருப்பதே என அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பது இரண்டாவது முதன்மை குறிக்கோள் என்றும் அவர். தெரிவித்தார். போரில் நுழைந்ததற்கான ஒரே நோக்கம் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பது என...

பெண்ணொருவரின் தகாத படங்களை பரப்பிய நபர் கைது!

ஒரு பெண்ணின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், ஆணைமடு பொலிஸ் பிரிவில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை (13) அன்று, அந்த பெண் அளித்த முறைப்பாட்டை அடுத்து, வாரியபொல கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது...

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இவ்வாறு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தேகம பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்கு சென்று சிறுமியை...

அம்பேபுஸ்ஸ பகுதியில் தொடரூந்து கோளாறு; சேவைகள் பாதிப்பு

அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு காரணமாக குறித்த வழித்தடத்தில் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

உயர்தர பரீட்சை வினாத்தாள் பொதி கண்டுபிடிப்பு; விசாரணை ஆரம்பம்

ஒகஸ்ட் 14 அதாவது நாளை நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தர (A/L) இயற்பியல் (பிசிக்ஸ்) பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இன்று (13) அம்பலாந்தோட்டையில் உள்ள உயர்தர பரீட்சை நிலையம் ஒன்றில் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து, கல்வி அமைச்சு விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட பொதிகள், அம்பலாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர பரீட்சை...

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை (13) லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானார். அவரது சொத்துக்கள் தொடர்பாக நடைபெறும் விசாரணைக்காக அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஆணைக்குழுவால் அனுப்பப்பட்ட அறிவிப்பை தொடர்ந்து அவர் இன்று ஆஜரானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டெங்கு உயிரிழப்புக்கள் 68-ஆக அதிகரிப்பு – 91,059 பேர் பாதிப்பு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இலங்கையில் டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக அதிகரித்துள்ளது. இதற்கமைய உயிரிழப்பு விகிதம் 0.075% ஆக பதிவாகியுள்ளது. 2026 ஒகஸ்ட் 12 நள்ளிரவு வரையிலான நிலவரத்திற்கமைய பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 91,059 ஆகும். ஜூலையில் 29,971 பேர் பதிவான நிலையில் அதிகபட்சமாக  டெங்கு காய்ச்சலுடன்...
- Advertisement -

Latest News

காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

கொழும்பு காலி முகத்திடல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (15) காலை கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில்,...