Wednesday, June 18, 2025

புதிய செய்திகள்

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், ஏனைய பல...

தேசபந்து தென்னகோனுக்கு மீண்டும்  விளக்கமறியல்!

வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன், 2025 ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தென்னக்கோன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலுக்கு முன்னால்...

நாமலுக்கு எதிராக CID விசாரணை ஆரம்பம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரி பரீட்சைக்கு மோசடியாக தோற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டக் கல்லூரி தேர்வுகளின் போது நாமல்...

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தம் தொடர்பில் முன்னாயத்த நடவடிக்கைள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிர்வுகூறலின் அடிப்படையில் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைள் தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி இன்று (4/3/2025) இடம் பெற்றது. மாவட்ட செயலகம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைத்து UNFPA மற்றும் அவுஸ்ரேலியன் அயிட் நிதி அனுசரணையில் இந் நிகழ்வு இடம் பெற்றது. காலநிலை மாற்றத்தினால் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள்...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று புதன்கிழமை (02) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்  புத்தளம் - ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆராச்சிக்கட்டு...

ட்ரம்பின் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகல்..!

அமெரிக்க அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறைத் தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற...

ட்ரம்பின் வரி விதிப்பால் இலங்கையின் ஆடை தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்!

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி அதிகரிப்பு இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். தற்போது 12 வீதமாக காணப்படும் வரியானது 40 வீதத்திற்கும் அதிகமாக அதிரிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள வரி மிக அதிகமாக இருப்பதாக...

காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஐவர் கைது!

மாத்தளை காவல் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்கள் இன்று (03) கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மஹானமர அக்குரணை பகுதியையும் மாத்தளை வரகாமுர பகுதியையும் சேர்ந்தவர்கள் என்று மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம். திரு. என். விக்ரமநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

மாத்தளை - தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலோகஹஎல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (02/04/2025) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை கண்டலம் பிரதேசத்தில் வசிக்கும் ...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படாது – விவசாய அமைச்சு!

பண்டிகைக் காலத்திற்கான அரிசி இறக்குமதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை உள்நாட்டு அறுவடைகளிலிருந்து வழங்க முடியும் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நுகர்வோர் எந்தவித சிரமத்தையும் சந்திப்பதைத் தடுக்க அரசாங்கம் தேவையான...
- Advertisement -spot_img

Latest News

மன்னாரில் அரச பேருந்தில் பாடசாலை மாணவி மீது ராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை!

மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து  முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு  அரச பேருந்தில் பயணித்துக்  கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது  அப்பேருந்தில் பயணித்த ராணுவ சிப்பாய் ஒருவர்...
- Advertisement -spot_img