பாம்பை விட்டுத் தந்தையின் உயிரைப் பறித்த மகன்கள்..!!
தந்தையின் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரது மகன்களே தந்தையை கொலை செய்த சம்பவம் தமிழகத்தின் திருவள்ளூரில் நடந்துள்ளது. பாடசாலை ஒன்றில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் 56 வயதுடைய ஆண் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மகன்கள் இருவரும் கட்டு விரியன் பாம்பை விட்டுத் தந்தையைக் கடிக்க வைத்தது வெளிவந்துள்ளது. போலிசாரின் விசாரணைகளின்
ட்ரம்பிற்கு ‘FIFA சமாதான விருது வழங்கப்பட்டது..!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் நிகழ்வு அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்றது. இதன் போதே, இந்தவிருது அவருக்கு வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இந்தவருடம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதில், முதலாவது
அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களுக்கு தடை!
அவுஸ்திரேலியாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு வயது சரிபார்ப்பை கட்டாயமாக்கி இருப்பதாக ஸ்னாப்சாட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிசம்பர் 10 முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அமுலுக்கு வரும் நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்கள் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால் அதிகபட்சம் 49.5 மில்லியன் அவுஸ்திரேலிய
கனடாவில் வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
கனடா, தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கையாக பில் சி-3 எனும் புதிய சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச செய்திகள் தெரிவிப்பதன்படி, இந்த சட்ட மாற்றத்தால் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானவர்கள் பலனடையவுள்ளனர். கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப், நீண்ட காலமாக நிலவி வந்த குடியுரிமை தொடர்பான சிக்கல்களை இந்த சட்டமூலம் சரிசெய்யும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்தோர்கள்
65 நாட்கள் தொடர்ச்சியான ‘துருவ இருள்’: ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரத்தில், இந்த ஆண்டிற்கான கடைசி சூரிய அஸ்தமனம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர், நகரம் அடுத்த 65 நாட்கள் தொடர்ச்சியான இருளான ‘துருவ இரவு’ (Polar Night) நிலையை எதிர்கொள்ளவுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் பரோ (Barrow) என அழைக்கப்பட்ட இந்த நகரம், ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே சுமார்
டொராண்டோவில் இருந்து 35,000 குடும்பங்கள் வெளியேற்றம் !
கனடாவின் டொராண்டோ பகுதியில் கடந்த வருடம் 35,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்பங்கள் பெரும்பாலானவை கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளன. புதிய தரவுகளின் படி, 2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை, டொராண்டோ பகுதியிலிருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 68,173 குடும்பங்களில் 51.5%
உலகக் கிண்ண ரசிகர்களுக்கான சிறப்பு விரைவு விசா – ட்ரம்ப் அறிவிப்பு!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை காண அமெரிக்கா வர விரும்பும் ரசிகர்களுக்காக சிறப்பு விரைவு விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய மூன்று நாடுகளிலும் அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஏற்கனவே
காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரிப்பு!
காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று அங்கீகரித்தது. சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அமைத்தல் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டமாக இது விவரிக்கப்படுகிறது. குறித்த தீர்மானத்திற்கு பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி – சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. எனினும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச ஊடகங்கள் இதை மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியாக வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு மாணவர் முன்னிலையில் வெடித்த போராட்டங்களை அடக்குவதற்காக படுகொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீது