Friday, June 5, 2026
No menu items!

World News

அமெரிக்காவினால் நாட்டுக்கு ‘பி 628’ ரகக் கப்பல் அன்பளிப்பு

அமெரிக்க அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பி628 ரகக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இந்தக் கப்பல் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்றும், இந்த கப்பல் இலங்கை கடற்படையில் இணைவதில் இது ஒரு...

லெபனான்-இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணக்கம்

வொஷிங்டனில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், லெபனானும் இஸ்ரேலும் நேற்று ஜூன் 3, புதன்கிழமை அன்று போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கமைய இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த வேண்டும் எனவும் தெற்கு லிட்டானி பகுதியை லெபனான் இராணுவம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுக்கும் அதேவேளை ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. இதேவேளை...

ஈரானின் மறைந்த உச்ச தலைவருக்கு 3 நாள் இறுதி மரியாதை

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, அறிவிக்கப்பட உள்ள திகதியில் மூன்று நாள் அரச இறுதி மரியாதை செய்யப்படும் என ஈரான் குறிப்பிட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு போரின் முதல் நாளில் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவராகவிருந்த அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கான இறுதி மரியாதை நிகழ்வு...

தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் உறுதி; ட்ரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹிஸ்புல்லா பிரதிநிதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பிறகு, தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெய்ரூட்டிற்குள் இஸ்ரேலியப் படைகள் நுழையாது என்றும், அனைத்துத் துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார். பெய்ரூட்டின் தஹியே மாவட்டத்தைத் தாக்குவோம் என்ற இஸ்ரேலின் அச்சுறுத்தல் மற்றும்...

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம் தேடுவதற்காக, ஏழு கிராமவாசிகள் கொண்ட ஒரு குழு மே 20 அன்று அந்தக் குகைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குகையின் நுழைவாயில் முற்றிலுமாக...

கொங்கோவில் இபோலா தொற்றால் 223 பேர் வரை உயிரிழப்பு

கொங்கோ நாட்டில் இபோலா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் இபோலா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 906 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை உகாண்டாவிலும் ஒன்பது இபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு கொங்கோவில் கடந்த இரண்டு மாதங்களாக இபோலா நோய்ப்...

ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக, ஹொங்கொங் நாட்டின் பல நிறுவனங்கள்/அமைப்புகள் மீது அமெரிக்கா இந்த வாரம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரான் தனது இராணுவத்திற்காக பணம் ஈட்டுவதை நிறுத்த முயற்சிப்பதாக தெரிவித்து அமெரிக்கா இவ்வாறு பொருளாதார தடை விதிப்பதாக கூறியுள்ளது. இதற்கமைய நேற்று வியாழன், 28,அன்று 15க்கும் மேற்பட்ட ஹொங்கொங் நிறுவனங்களை அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது. ஈரானின் இராணுவ...

உகாண்டா பெண்ணுக்கு இபோலா தொற்று இல்லை; இந்திய சுகாதார அமைச்சு

இபோலா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட உகாண்டா பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று இல்லை என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த பெண், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது குறித்து அமைச்சு எதுவும் தெரிவிக்கவில்லை. உகாண்டாவிலிருந்து அகமதாபாத் வழியாக வருகை அவர்,...

அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!; ஈரான்

ஈரானிய வான்வெளியில் பிரவேசித்ததாக கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் எனும் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் ஒரு "ஆளில்லா விமானம்" என அடையாளம் காணப்பட்டு, ஈரானிய எல்லைக்குள் நுழைந்த பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக IRGC கூறியதுடன், அமெரிக்காவால் மேலும்...

இந்திய அன்பளிப்பு; 134 கெப் ரக வாகனங்களை வட மாகாணத்திற்கு வழங்க திட்டம்

இலங்கை காவல்துறையின் பயன்பாட்டிற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள், இன்று காலை (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. குறித்த வாகனங்களுக்கான இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த வாகனங்கள் வட மாகாண காவல் நிலையங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட உள்ளன. இதன்போது எதிர்காலத்திலும்...
- Advertisement -

Latest News

ரன்வீருக்கு விடுத்த தடையை திரும்ப பெற்ற திரைத்துறை அமைப்பு

மேற்கு இந்திய சினிமா பணியாளர்களது கூட்டமைப்பு (FWICE), நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக பிறப்பித்திருந்த ஒத்துழையாமை (அவருடன் பணியாற்ற வேண்டாம் என்ற) உத்தரவை (NCD) திரும்பப்...