சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (NDU) குழுவொன்று, இலங்கையில் தங்களுடைய வெளிநாட்டு ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, கடற்படைத் தலைமையகத்திற்கு நேற்றைய தினம் (18 ஜூன் 2024) விஜயம் செய்தது.
இந்த விஜயத்தின் போது குழுவின் உறுப்பினர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தனர்.
41 மாணவர் அதிகாரிகளை உள்ளடக்கிய NDU தூதுக்குழுவிற்கு ரியர் அட்மிரல் ஹு காங்ஃபெங் தலைமை தாங்கினார்.
அவர்களது உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, ரியர் அட்மிரல் ஹு கேங்ஃபெங், வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுடன் பரஸ்பர நலன்கள் தொடர்பான பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
கடற்படையின் பிரதானி, , பணிப்பாளர் நாயகம், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர், ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் பாதுகாப்புத் தூதுவர். கொழும்பில் சீன மக்கள் குடியரசின் சிரேஷ்ட கேணல் சோவ் போ அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.