ட்ரம்பிற்கு ‘FIFA சமாதான விருது வழங்கப்பட்டது..!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டிக்கான குழுக்களைத் தெரிவு செய்யும் குலுக்கல் நிகழ்வு அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெற்றது. இதன் போதே, இந்தவிருது அவருக்கு வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவினால் இந்தவருடம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விருதில், முதலாவது
65 நாட்கள் தொடர்ச்சியான ‘துருவ இருள்’: ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரத்தில், இந்த ஆண்டிற்கான கடைசி சூரிய அஸ்தமனம் அண்மையில் நிகழ்ந்துள்ளது. இதன் பின்னர், நகரம் அடுத்த 65 நாட்கள் தொடர்ச்சியான இருளான ‘துருவ இரவு’ (Polar Night) நிலையை எதிர்கொள்ளவுள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னர் பரோ (Barrow) என அழைக்கப்பட்ட இந்த நகரம், ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே சுமார்
உலகக் கிண்ண ரசிகர்களுக்கான சிறப்பு விரைவு விசா – ட்ரம்ப் அறிவிப்பு!
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை காண அமெரிக்கா வர விரும்பும் ரசிகர்களுக்காக சிறப்பு விரைவு விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய மூன்று நாடுகளிலும் அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஏற்கனவே
அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பான ஒப்பந்தம் இன்னும் இல்லை – வெளிவிவகார அமைச்சர் விளக்கம்!
அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாக இலங்கை இதுவரை இறுதி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், இலங்கை–அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் இதுவரை 17 சுற்றுகள் முடிந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, இலங்கைக்கான சில
காஸா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கீகரிப்பு!
காஸா பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று அங்கீகரித்தது. சர்வதேச உறுதிப்படுத்தல் படையை அமைத்தல் மற்றும் பாலஸ்தீன அரசை உருவாக்கும் பாதையை உருவாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டமாக இது விவரிக்கப்படுகிறது. குறித்த தீர்மானத்திற்கு பாதுகாப்புச் சபையின் 13 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அமெரிக்காவிற்கு போட்டியாக அமைந்த சீனாவின் புதிய கப்பல்..!!
சீனாவின் மிகவும் திறமையான விமானம் தாங்கி கப்பலான ஃபுஜியன் இன்று(7) உத்தியோகபூர்வமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இது கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவை முந்திக்கொள்ளும் முயற்சியில் சீனாவிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வார தொடக்கத்தில் ஹைனான் தீவில் உள்ள துறைமுகத்தில் குறித்த கப்பலை பார்வையிட்டதுடன், அதனை இயக்கும் விழாவிலும் கலந்துகொண்டார். ஃபுஜியன் சீனாவின் மூன்றாவது
இரகசிய அணு ஆயுத சோதனைகள் நடத்தும் 4 நாடுகள் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “இத்தகைய சூழலில் அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
சீன – அமெரிக்க தலைவர்கள் சந்திப்பு!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையிலான முக்கியமான சந்திப்பு இன்று (30) பூசனில் நடைபெற்றது. சீனாவும் அமெரிக்காவும் வேறுபட்ட தேசிய நிலைமைகளைக் கொண்ட நாடுகள் என்பதால், கருத்து வேறுபாடுகளை முழுமையாகத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று ஷி ஜின்பிங் தெரிவித்தார். எனினும், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்படும் சவால்களை நேர்மறை முறையில் நிர்வகிக்க
அமெரிக்கா செல்வந்த, சக்திவாய்ந்த நாடு– டொனால்ட் ட்ரம்ப்!!
அமெரிக்கா செல்வந்த நாடாகவும், சக்தி வாய்ந்த நாடாகவும் இருப்பதற்கு காரணம் வரிகள் தான் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மீண்டும் செல்வந்த நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும், தேசிய அளவில் பாதுகாப்பாகவும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் காரணம் வரிகள் என அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் பெரும் முன்னேற்றம்…
இலங்கை முதலீட்டு சபை (BOI), 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரைஅங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மொத்தம் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முதலீடுகளுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு வணிகக் கடன்களும் அடங்குகின்றன. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 138% அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.