மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் மரம் சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!
மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இரவு ஏற்பட்ட துயரமான விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார். பெரிய மரம் ஒன்று சாலையோரத்தில் சரிந்து, பயணித்த முச்சக்கர வண்டியின் மீது வீழ்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் இரண்டரை வயது குழந்தை, 48 வயதான பெண், 57 வயதான ஆண் ஆகிய
யாழ்ப்பாணத்தில் இரு சோகச் சம்பவங்கள் – ரயில் விபத்தில் பெண் உயிரிழப்பு, பேருந்து மோதி மீன்வியாபாரி பலி!
சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி–சங்கத்தானை நிலையத்தை அடைந்தபோது, அந்தப் பெண் இறங்க முயன்றுள்ளார். அவர் இருந்த பெட்டியில் இறங்கும் தளம் இல்லாததால், வேறு பெட்டியின் வழியாக இறங்க முயன்றபோது ரயில் நகரத் தொடங்கியதால் தவறி கீழே
களுதாவளையில் பாதசாரிக் கடவையில் விபத்து – தாய், பாடசாலை மாணவி படுகாயம்!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இரா.கிருஷ்ன வித்தியாலயத்திற்கு முன்னால் புதன்கிழமை(15.10.2025) இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உட்பட இருவர் படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையிலிருந்து பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக் கொண்டு எதிரே அமைந்துள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் குறுக்கீடு செய்தவேளை தீடீரென வந்த
ஆசிரியரை தாக்கிய மாணவன் – மொனராகலை பாடசாலையில் பரபரப்பு!
மொனராகலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், மாணவர் ஒருவரால் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (அக். 1) காலை 8 மணியளவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. மாணவர் ஒருவர் வைத்திருந்த கைத்தொலைபேசி மின்னேற்றியை (Phone Charger) ஆசிரியர் கைப்பற்றிய பின்னர், அந்தச் செயலில் இருந்து உருவான வாக்குவாதம் முற்றி, மாணவர் ஆசிரியரை
சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி !
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவரால் தாக்கப்பட்ட தாதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாதி மீது தாக்குதலை நடத்தி விட்டு குறித்த நோயாளி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்திய நோயாளி கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது போதையில் இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர்
யாழில் பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு!
நேற்றையதினம் யாழில் பூப்புனித நீராட்டுவிழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு – பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மல்லாகம் – பயிரிட்டால் பகுதியில் நேற்றையதினம் பூப்புனித நீராட்டுவிழா கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு சென்று நேற்றிரவு அங்கு
புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு!
எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்விலேயே இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது 40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து கீழே விழுந்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து; ஒருவர் பலி!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது. இதனால் மின் கம்பம் உடைந்து தொலைபேசி கம்பத்தில் வீழ்ந்ததில் அதிலிருந்த இணைப்புக் கம்பிகள் வீதியில் வீழ்ந்துள்ளன. இதன்போது அவ்வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள்
சம்மாந்துறையில் விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
சம்மாந்துறை செந்நெல் கிராம பகுதியில் விசர் நாய்க்கடிக்குள்ளாகி 7 பேர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையைத் தொடர்பு கொண்டு வினவிய போது இந்த சம்பவம் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை குறித்த பகுதியில் நாளை கட்டாக் காலி நாய்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளிர்பான போத்தலொன்றை அருந்திய தந்தையும் மகளும் வைத்தியசாலையில் அனுமதி!
பலாங்கொடை – கிரிதிகல பகுதியில் உள்ள உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட குளிர்பான போத்தலொன்றை நுகர்வு செய்து அருந்திய தந்தையும் அவரது மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பானத்தை அருந்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர்கள் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரியை சேர்ந்த 40 வயதான தந்தையும் 9 வயதான அவரது