போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சஜித் பிரேமதாச கோரிக்கை!
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இங்கே அறிக்கைகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், சட்ட நடவடிக்கை
திருகோணமலை விவகாரம்-காவல்துறையின் தலையீடு குறித்து சஜித் பிரேமதாச கேள்வி!
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பொதிராஜ விஹாரையைச் சுற்றி நேற்று ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக காவல்துறையின் செயல்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இத்தகைய நடவடிக்கைகள் இனவெறி பதற்றங்களை தூண்டும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். அரசியலமைப்பின் 2ஆம் அதிகாரத்தை மேற்கோள் காட்டிய அவர், புத்தமதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போதிலும் பிற மதங்களுக்கு மரியாதை
சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!
சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்த நான்கு பேரின் பெயர்கள் நேற்று
எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்குப் புறப்பட்டார். இந்த விஜயத்தின் போது அவர் பல அரசு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சஜித் பிரேமதாச இந்தியாவில் நடைபெறும் பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன், சில முக்கிய அரசியல்
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது; சபாநாயகர்!
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)அருண ஜயசேகரவுக்கு எதிரான எதிர்க்கட்சியின் அவநம்பிக்கை பிரேரணை ஒழுங்கற்றது என்றும் அதன் தற்போதைய வடிவத்தில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று தெரிவித்தார். இந்தப் பிரேரணை கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 32 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. கடந்த ஓகஸ்ட் 19
ஓரினச்சேர்க்கை விவகாரம்; வெளிநாட்டு அமைப்புகளுடன் சில குழுக்கள் இணைந்து செயல்படுகின்றன – கர்தினால் மெல்கம் ரஞ்சித் !
நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக, வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து சில குழுக்கள் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் இச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற, ருஹுணு பல்கலைக்கழக துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கம் வழங்கிய
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி அழுத்தம்!
பத்து ஆண்டுகளாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இதுகுறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் பல மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இதனை விரைவில் நடத்த வேண்டும் என்று
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை வெளியிடுமாறு சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை!
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனது ‘X’ பதிவில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். மேலும் வெளிப்படைத்தன்மைக்கு உறுதியளித்த ஜனாதிபதி, முழுப் பட்டியலையும் பாராளுமன்றத்தில் வெளியிட்டு செயல்முறையைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று கூறினார். “388 வெசாக் மன்னிப்புகள் ரத்து செய்யப்பட்டன;
கொத்தலாவல மருத்துவ பட்டப்படிப்பு நிறைவை அரசாங்கம் எடுத்தது தவறு – சஜித் பிரேமதாச!
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளமை பாரியதொரு தவறு என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு உள்நாட்டு மாணவர்களைச் சேர்ப்பதை நிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மருத்துவப் பட்டப்படிப்பு
நியூசிலாந்து பிரதிப் பிரதமருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பு!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பு நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்து பிரதிப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸ், பிரதி அமைச்சரும், வெளிவிவகார அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகருமான மைக்கேல்