கந்தானையில் துப்பாக்கிச் சூடு: இருவர் காயம்!
கந்தானையில் இன்று (30) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தற்போது ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
கந்தானை பகுதியில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருளை மகிழுந்து ஒன்றில் எடுத்துச் சென்ற வேளையில், கந்தானை தொடருந்து நிலைய வீதியில் வைத்துக் குறித்த நபர் நேற்று கைதாகியுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொரளையைச்
சட்டவிரோதமான சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் கைது!
சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மான்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் வகை சிகரெட்டுகளை வைத்திருந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் விசேட அதிரடிப்படைத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி விசேட அதிரடிப்படை குழு ஒன்று நேற்று கந்தானை பொலிஸ் பகுதியில் சோதனை நடத்தியது. இச் சோதனையின்போது வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக
பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…!
கிரிபத்கொட பகுதியில் வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 37 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், போலி ஆவணங்களை தயாரித்து 130,000,00 ரூபாவுக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் இவருடன் இந்த மோசடி நடவடிக்கைக்கு
கொழும்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி குழந்தை பலி…!
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 5 வயது குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 09 ,தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நீச்சல் குளத்தில் வேறு பல குழந்தைகளுடன் அந்த குழந்தை நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளது. பின்னர் குழந்தையின்
மசாஜ் நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல்…
கந்தானையில் உள்ள மசாஜ் நிலையமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த ஐந்து பேர்கொண்ட குழுவொன்று 40 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 6 கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார்தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்த 8 பெண்களையும் அறையொன்றிற்குள் அழைத்துச் சென்று அவர்களிடமிருந்த கையடக்கத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு கொள்ளையர்கள் மசாஜ் நிலையத்திலிருந்த சிசிரிவி கமராவையும்
சில இடங்களில் நாளை நீர்வெட்டு..!
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(24) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, மஹர, தொம்பே ஆகிய
போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை..!
கம்பஹா-கந்தானை பிரதேசத்தில் நேற்று(13) பகல் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது வீட்டுக்கு முன்பாக ஹயஸ் வாகனத்தில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறைக் கும்பல், மேற்படி நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத்
கொழும்பில் சுற்றி திரிந்த மர்ம பெண்: வெளிவந்த தகவல்
கந்தானை நகரில் கடந்த சில நாட்களாக, மரியாள் போன்று உடையணிந்து சுற்றித் திரிந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக கந்தானை நகரில் வெண்ணிற ஆடை அணிந்து உலாவந்ததுடன் அவர் ஒரு வெளிநாட்டுப் பெண்ணாக சந்தேகிக்கப்படலாம் என்றும், மரியாளின் சாயலைச் சித்தரிப்பதாகவும் இதனடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸாரிடம்