கல்முனை அஷ்ரஃப் நினைவு மருத்துவமனையில் புதிய கட்டிட தொகுதி திறப்பு – ரூ.150 மில்லியன் செலவில் கட்டண வார்டுகள்!
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, ரூ.150 மில்லியன் செலவில் புதிய மருத்துவமனை கட்டிட தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் பொதுமக்களுக்கு நேற்று (18) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதிய கட்டிடங்களும், பிசியோதெரபி பிரிவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டன. 4 மாடிகள்
மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து; ஒருவர் பலி!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது. இதனால் மின் கம்பம் உடைந்து தொலைபேசி கம்பத்தில் வீழ்ந்ததில் அதிலிருந்த இணைப்புக் கம்பிகள் வீதியில் வீழ்ந்துள்ளன. இதன்போது அவ்வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள்
வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான மகிழுந்து..!
இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரத்
நிந்தவூர் பகுதியிலுள்ள பாலம் உடைந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு…!
கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஒலுவில் களியோடை பாலத்திற்கு அடுத்ததாக நிந்தவுர் பகுதியிலுள்ள பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்
பெண் ஒருவரை இழுத்து சென்ற முதலை…!
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான சொறிக் கல்முனை புட்டியாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (14.10) பெண் ஒருவர் மீன்பித்துக் கொண்டிருந்த போது அந்த பெண்ணை முதலை ஆற்றில் இழுத்துச் சென்று காணாமல் போயுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 11 முறைப்பாடுகள்!
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் 2 முறைப்பாடும் கல்முனை தொகுதியில் 3 முறைப்பாடுகளும் பொத்துவில் தொகுதியில 3 முறைப்பாடுகளும் அம்பாறை தொகுதியில் இருந்து 3 முறைப்பாடுகள் உட்பட 11 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளது. அதேவேளை தேர்தல் பிரச்சாரம் நேற்று இரவு 12 மணிவரை முடிவுற்றாலும் மாவட்டத்தில் இரண்டுமணிவரை சில பிரச்சார கூட்டம் இடம்பெற்றுள்ளதுடன் சுவரொட்டிகள் அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது என
வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தின் ஊடாக மட்டக்களப்பிலிருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தின் ரயர்வெடித்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதிய நிலையில் விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் விபத்து தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கல்முனை, கெபித்திகொல்லேவ பகுதிகளில் காட்டு யானை தாக்கி இருவர் பலி…!
கல்முனை, கெபித்திகொல்லேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்குதலினால் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை பஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள வீதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருவள்ளுவர் மத்திய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கெபித்திகொல்லேவ பகுதியிலுள்ள மயானமொன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் காட்டு யானை
கனரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்…!
கல்முனையில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் சம்மாந்துறை கைகாட்டி கல்லரச்சலைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். இவர் வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்கள் மாயம் ; தேடுதல் தீவிரம்…!!
பருத்தித்துறை துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நான்கு மீனவர்களும் ஒரு வாரமாகியும் கரைதிரும்பாத நிலையில், நேற்றுத் தீவிரமான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருத்தித்துறை துறைமுகத்திலிருந்து கடந்த ஏழாம் திகதி புறப்பட்ட மீனவர்களையே காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, கல்முனை, திருகோணமலை மற்றும் முள்ளியானைச் சேர்ந்த மேற்படி நான்கு மீனவர்களும், புறப்பட்ட தினத்திலிருந்து ஒரு வாரத்துக்குள் கரைதிரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இன்னமும்