பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை நீர்வெட்டு..!
வத்தளை, ஜா – எல உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இலஞ்சம் பெற்ற பரிசோதகர்- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது..!
ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த நபரின் முறைப்பாட்டின் பேரில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதியன்று, செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் கொம்பனித்தெரு ரயில் நிலையம் வழியாக பயணித்ததாகக் குற்றம் சாட்டி,
அதிவேக நெடுஞ்சாலைகளில் குவிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்!
நேற்று (11) இரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாலை மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எஃப்.ஏ. தெரிவித்தார். எம். பி. திரு. சூரிய பண்டார கூறுகிறார். இது விரைவுச் சாலையில் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்கானது. ஒரு வருடத்திற்கு முன்பு முந்தைய அரசாங்கத்தின் போது இலங்கை காவல்
களனி பல்கலைக்கழகத்தின் விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழப்பு!
களனி பல்கலைக்கழகத்தின் களனி பல்கலைக்கழகத்தின் CWW கன்னங்கரா விடுதியின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (23.10) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில்
சீரற்ற காலநிலை காரணமாக மூடப்படும் பாடசாலைகள்!
சீரற்ற காலநிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் (14) மற்றும் நாளையும் (15) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றும் மற்றும் நாளையதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக கொண்டுவந்த சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது…!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். மேலும், இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில்
புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம்! – ஜனாதிபதி உத்தரவு
களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும், முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி
சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்..!
அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் நேற்று (29) தப்பிச் சென்றுள்ளனர். இந்த இரு கைதிகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை சிற்றூண்டிச்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் தங்களின் சிறைச் சீருடைகளை களைந்துவிட்டு சிவில் உடைகளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அநுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடிய
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – சட்ட விரோத பொருட்கள் மீட்பு
தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப் பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. விமான நிலையத்தில்
குழந்தைகளை விற்பனை செய்த தாய் கைது..!
பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், 25,000ம் ரூபாவிற்கு தனது இரட்டை குழந்தைகளை விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக குழந்தைகளை விற்பனை செய்த தாயும் வாங்கிய இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு குழந்தையை வாங்கிய பெண்ணொருவர் ராகம பிரதேசத்திலும் , மற்றைய குழந்தையை