இன்றைய நாளுக்கான வானிலை..!!
வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை நாடு முழுவதிலும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று இரவு முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில்
பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி..!
பலத்த காற்று காரணமாக முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்றினால் திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இன்றைய நாளுக்கான வானிலை!
நாடு முழுவதிலும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய
காலநிலை மாற்றம் தொடர்பான திட்டம் தயாரிப்பதற்கான கலந்துரையாடல்..!
இலங்கை எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய ரீதியிலான திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியும் கலந்துரையாடல் கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது. குறித்த திட்டமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் குறித்த திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பேராசிரியர் Jagath munasinghe (Town and country planing Expert) காலநிலை தொடர்பான தெளிவூட்டலை வழங்கினார்.
உலகளாவிய ரீதியில் 199 திட்டங்களை நிறுத்திய எலான் மஸ்க்!
காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ஆணையாளராக செயல்படும் எலான் மஸ்க் இந்த திட்டங்கள் உட்பட உலகளாவிய ரீதியில்
நாட்டில் அதிகரித்துவரும் சிக்குன்குனியா நோயாளர்கள்!
நாட்டில் சிக்குன்குனியா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன் காலநிலையினால் நுளம்புகள் பெருகியதன் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோயின் அறிகுறிகளாக ஆரம்ப நாட்களில் கடுமையாகக் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி மற்றும் தசை வலி, மூக்கு கருமையாதல் மற்றும்
கண்டி-மஹியங்கனை வீதி மீண்டும் திறப்பு!
அண்மைய நாட்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (21) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை உடுதும்பர கஹட்டகொல்ல பகுதியிலிருந்து மேடுகள் மற்றும் பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் வீதியை மூடுவதற்கு நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று ஆபத்தான நிலைமை தொடர்ந்தும் நீடிப்பதால், இரவில் பயணிக்கும் வாகனங்களுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய விபத்துக்களை
காலநிலை தொடர்பான பேரவையின் இணைத் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!
இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான காலநிலை தொடர்பான பேரவையின் இணைத் தலைவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் NPP பாராளுமன்ற உறுப்பினர் எல்.எம்.அபேவிக்ரம ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற அறிக்கையின்படி, 10வது பாராளுமன்றத்திற்கான காலநிலை தொடர்பான குழுவை மீண்டும் அமைப்பதற்கான முதல் கூட்டம் கடந்த வாரம் (ஜனவரி 08) நடைபெற்றது. SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் NPP
அஞ்சல் புகையிரதசேவை இரத்து!
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக புகையிரத பாதையின் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு – கோட்டை வரையான இரவு நேர அஞ்சல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக மலையக
பாதகமான காலநிலை காரணமாக தரையிறங்கவிருந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன!
பாதகமான காலநிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மூன்று விமானங்கள் மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன, மீதமுள்ள மூன்று விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் (திருவனந்தபுரம்) விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணையை விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு அதிகாரிகள் பயணிகளை வலியுறுத்தியுள்ளனர்.