யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரளக் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் கைப்பற்றிய கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தோனியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனை
யாழ்ப்பாணம் – குருநகர் பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
குருநகர் பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம்
சர்வதேச கடற்தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்(19) செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேவேளை கடற்தொழில் அமைச்சின் நடமாடும் சேவையும் குருநகர் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றமையும்