கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து – ஐவர் படுகாயம்..!!

கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து – ஐவர் படுகாயம்..!!

Dec 6, 2025

பம்பலப்பிட்டிய மெரின் வீதியில் கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த  விபத்து இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற

Read More
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து: 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து: 5 பேர் காயம்!

Nov 12, 2025

மட்டக்களப்பில், கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகே இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து புதன்கிழமை (நவம்பர் 12) காலை இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலிஸார் சம்பவத்தை குறித்து விசாரணைகளை தொடர்கின்றனர்.

Read More
பெண்களிடையே போதைப்பொருள் அடிமைத்தனம் வேகமாக அதிகரிப்பு – அமைச்சு கவலை!

பெண்களிடையே போதைப்பொருள் அடிமைத்தனம் வேகமாக அதிகரிப்பு – அமைச்சு கவலை!

Nov 5, 2025

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் பெண்கள் போதைக்கு அடிமையாகும் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவது குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு கடும் கவலை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சரோஜா சாவித்திரி பவுல்ராஜ் தெரிவித்துள்ளார், சமீபத்திய தகவல்களின் படி இளம் பெண்களும் யுவதிகளும் “ஐஸ்”, மாத்திரைகள், மதுபானம், சிகரெட் போன்ற போதைப்பொருட்களுக்கு ஆபத்தான அளவில் அடிமையாகி வருகிறார்கள். காவல்துறை

Read More
கொழும்பு நகைக் கடைகளில் கொள்ளை: கலால் துறையின் ஐந்து அதிகாரிகள் கைது!

கொழும்பு நகைக் கடைகளில் கொள்ளை: கலால் துறையின் ஐந்து அதிகாரிகள் கைது!

Oct 31, 2025

கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து ரூ.102 மில்லியன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கலால் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கார்போரல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், அதிகாரப்பூர்வ சோதனை நடத்துவதாகக் கூறி சீ ஸ்ட்ரீட்டில் உள்ள நகைக்

Read More
முல்லைத்தீவு: A9 வீதியில் வேன் கவிழ்ந்து விபத்து!

முல்லைத்தீவு: A9 வீதியில் வேன் கவிழ்ந்து விபத்து!

Oct 29, 2025

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ (Hiace) வேன் வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்தது. கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம், அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டது.

Read More
இன்றைய நாளுக்கான வானிலை..!!

இன்றைய நாளுக்கான வானிலை..!!

Oct 29, 2025

மத்திய , சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வடமாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குசரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென்,வடமத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலைமற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்மணித்தியாலத்திற்கு சுமார் 50 – 60 kmவேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரிமொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். பலத்த காற்றும்

Read More
தனியார் சொகுசு பேருந்து விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

தனியார் சொகுசு பேருந்து விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

Oct 23, 2025

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது, மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் நேற்று (22) விபத்துக்குள்ளானது. பரைய நாளன் குளம் பொலிஸ் பிரிவின் பிராந்தியத்திற்குள் இடம்பெற்ற இந்த விபத்தில், சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை

Read More
நாட்டில் கனமழை தாக்கம் – இரண்டு உயிரிழப்புகள், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!!

நாட்டில் கனமழை தாக்கம் – இரண்டு உயிரிழப்புகள், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு!!

Oct 21, 2025

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, கொழும்பில் பல வீதிகளில் வெள்ளநீர் தேங்கி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலத்த மழையினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, சீரற்ற வானிலை காரணமாக  இதுவரை இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மேலும்,

Read More
அம்பாறை–கொழும்பு பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் – சாரதி உட்பட இருவர் கைது

அம்பாறை–கொழும்பு பேருந்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் – சாரதி உட்பட இருவர் கைது

Oct 18, 2025

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தகவலின்படி, பேருந்து சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு நபர் ஆகியோர் அம்பாறை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (18) காலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர்கள் கைதானதுடன் பேருந்தும் பொலிஸாரால்

Read More
இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 பேரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்ப்பு!!!

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 பேரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்ப்பு!!!

Oct 18, 2025

நேபாளத்தில் கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். மற்றைய இருவரும் பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும் தடுத்து

Read More