நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகிய நாமல் ராஜபக்ச!
இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (நவம்பர் 19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபாநாயகர் அலுவலகத்தில் பாம்பு !
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அலுவலக அறையில் நேற்று (நவம்பர் 18) காலை பாம்பு ஒன்று காணப்பட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சபாநாயகர் பொதுவாக உணவருந்தும் அறையின் பகுதியிலுள்ள ஜன்னல் வழியாக பாம்பு உள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பின் தகவல் கிடைத்ததும் நாடாளுமன்ற தோட்டப் பராமரிப்பு அதிகாரி உடனடியாக பாம்பை பாதுகாப்பாக அகற்றியுள்ளார். தியவண்ணா ஓயா பகுதியிலிருந்து
நாடாளுமன்றத்தில் அநாகரீக வார்த்தைப் பயன்பாட்டை தவிர்க்க சபாநாயகர் எச்சரிக்கை!
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் தொடங்கும் முன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருத்தமற்ற மற்றும் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தாதிருக்க அறிவுறுத்தினார். சில உறுப்பினர்கள் இதுவரை இந்த விதிமுறையை மீறி வார்த்தைப் பிரயோகங்களை தொடர்ச்சியாகச் செய்துவந்ததாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த சபாநாயகர், அநாகரீகமான வார்த்தைகள் நாடாளுமன்ற கௌரவத்தை சீர்குலைக்கவும், வேதனைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கவும் செய்யும் என கூறினார்.
பாதுகாப்பு கோரும் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒப்புதல்!
பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து இன்று (31) பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடலின் போது,
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானக்கு உயிர் அச்சுறுத்தல்!
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜகத் விதான இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு களுத்துறை டிஐஜிக்கு ஐஜிபி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “வாகனத்தில்
செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு இன்று (செப். 23) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வு செப்டெம்பர் 26ஆம் திகதி வரை தொடர்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இன்றைய அமர்வு நிரல்பட்டியல்: மு.ப 9.30 – 10.00: நிலையியற்
நாடாளுமன்ற அமர்வுகள் – செப்டம்பர் 23 முதல் 26 வரை!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (11) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் குழுவின் கூட்டத்தில், 2025 செப்டம்பர் இரண்டாவது வார அமர்வுத் திட்டம் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, செப்டம்பர் 23 முதல் 26 வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9.30 – 10.00 வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.காலை 10.00
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை!
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த முடிவை இன்று சபாநாயகர், பாராளுமன்றத்தில் முன்வைத்த பின்னரே ரஞ்சித் மத்துமபண்டார இதனை அறிவித்தார். எதிர்க்கட்சியின்
நடைமுறைக்கு வரும் பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டம்!
பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) சான்றுரைப்படுத்தினார். கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம், 2025 ஆம் ஆண்டின் 17 இலக்க பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமாக நடைமுறைக்கு வருகிறது. இச்சட்டத்தின் மூலம், சூதாட்டம் தொடர்பான பழைய சட்டங்கள் (குதிரைப் பந்தய பந்தயம் சட்டம், சூதாட்டக் கட்டளைச்சட்டம்,
37 ஆவது காவல்துறை மா அதிபர் நியமனம் தொடர்பில் கலந்துரையாடல்!
37 ஆவது காவல்துறை மா அதிபர் நியமனம் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது. தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, காவல்துறை மா அதிபர் பதவிக்கு, தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை முன்மொழிந்துள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதியின் முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்காக