25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிப்பு..!!
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண மத்திய நிலையம் இதற்கான விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் மாவட்ட மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக முற்றாக அழிவடைந்த வீடுகள், பகுதியளவில அழிவடைந்த வீடுகள்
அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை..!!
அனர்த்த நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை நேற்று (05) வெளியிடப்பட்டுள்ளது. திடீர் அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக, விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை கீழே…
கமத்தொழில், கால்நடை, நீர்ப்பாசன துறை சேதங்கள் – இழப்பீடு ,மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த கலந்துரையாடல்!!
கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விவசாய அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. நாட்டை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (05) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், விவாதத்தின் பின்னர் இவ்வாறு மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர தீர்வு தேவை ஜனாதிபதி வலியுறுத்தல்!
சீரற்ற காலநிலையால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்குமாறு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
அவதூறு பரப்புவோருக்கு எதிராக அவசரகால சட்டம்!!
ஜனாதிபதி மற்றும் சில அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான அறிக்கைகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த சந்திப்பின் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர், “சமூக ஊடகங்களை
ஜனாதிபதி தலைமயில் அவசர அமைச்சரவைக் கூட்டம்..!!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பைச் செய்திப் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார விடுத்துள்ளார்.
பேரிடர் தொடர்பில் பொய்யான தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!
பேரிடர் காலப்பகுதிகளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில் இந்த தகவலை பரப்பியர்களை உடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
நெல் விவசாயிகளுக்கு உர மானியத்தின் நிலையான விலையை நிலைப்படுத்த வேண்டும்; கே.டி. லால்காந்த!
விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நெல் விவசாயிகளுக்கான உர மானிய விலையை நிலைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர், நெல் பயிர்செய்கை தொடர்பில் திட்டவட்டமான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
57வது அகவையை எட்டிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (24) தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1968 நவம்பர் 24ஆம் திகதி பிறந்த அவர் தனது ஆரம்பக் கல்வியை தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்தார். பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்து, உயர்தரத்தில் கணிதப் பிரிவில் பயின்றார். 1992ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் சேர்ந்த அவர், 1995ஆம்