ஜப்பானில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு..!
ஜப்பான் உலகின் மிகவும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். அங்கு “நங்காய் ட்ரஃப்” (Nankai Trough) என்ற நிலத்தடி பகுதியில் 8 முதல் 9 வரையிலான ரிக்டர் அளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 80% சாத்தியக்கூறு உள்ளதாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய நிலநடுக்கமாக (megaquake) இருக்கலாம், இதனால் பெரும்
நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் உள்ள நான்கை பள்ளத்தாக்கில் சுமார் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக 298,000 பேர் வரை கொல்லப்படுவார்கள் என்று ஜப்பானிய அரசாங்கம் திங்களன்று ஒரு நிபுணர் குழு தொகுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் முந்தைய கணிப்பின்படி, நன்காய் தொட்டி நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார்
பூக்களால் நிரம்பியுள்ள தோட்டங்கள்!
உலகெங்கிலும் உள்ள தோட்டங்கள் இப்போது பூக்களால் நிரம்பியுள்ளன, இது வசந்த காலத்தின் விடியலைக் குறிக்கிறது. அதன்படி, வாஷிங்டனும் செர்ரி மலர்களால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பான் அதன் சகுரா அல்லது செர்ரி பூக்களுக்கு மிகவும் பிரபலமான நாடு. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாநிலமும் ஒவ்வொரு மார்ச் மாதத்திலும் செர்ரி மலர்களால் நிரம்பியிருக்கும். இது ஆயிரக்கணக்கான சுற்றுலாப்
நிதியுதவி வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் கட்டுநாயக்க, பியகம, சீதாவக மற்றும் வத்துபிடிவலை தொழில்துறை வலயங்களுக்கு 12 செட் உபகரணங்களை கொள்வனவு செய்ய 300 மில்லியன் ஜப்பானிய யென்னை (தோராயமாக LKR 590 மில்லியன்) நிதியுதவி வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று (20/03/2025) கைச்சாத்திடப்பட்டது. இலங்கை முதலீட்டு சபை (BOI) யின் கீழ் செயல்படும்
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் தடையை நீக்க அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறித்த வாகனங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான பரிசோதனை உறுதிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளும் பணியகத்துக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும்
வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்பவர்களுக்கு ஒரு செய்தி..!
தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் விளக்கினார். நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோதே அவர் இதனை விளக்கினார். எதிர்காலத்தில் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கினார்.
ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ – வெளியேறும் மக்கள்..!
ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல இலட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஜப்பான் விஜயம் – முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமா?
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இம் மாதம் 22 ஆம் திகதி அளவில் இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது இருநாட்டு பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது. இதேவேளை, வெளியுறவுத் துறைக்கான
இன்று நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்..!
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வகை மற்றும் அளவு போன்ற தகவல்கள் குறித்த கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர் அறிவிக்க முடியும் என
கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கைது..!
போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். கணவருக்கு 40 வயது, மனைவிக்கு 34 வயது. ஜப்பானின் நரிட்டாவிற்கு திங்கட்கிழமை (17) இரவு 8.35 மணிக்கு புறப்பட்ட