மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!!
2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப (GIT) தேர்வுக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைக்குறிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் உதவி கல்வி பணிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். க.பொ.த உயர்தரப்
தேயிலை விவசாயிகளுக்கான QR குறியீடு முறைமையிலான உர மானியம் விநியோகம் விரைவில் ஆரம்பம்!
தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் நடவடிக்கையை மேலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், QR குறியீடு அடிப்படையிலான புதிய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும், முதல் கட்டமாக செப்டம்பர் 26ஆம் திகதி மதுகமவில்
கல்விச் சீர்திருத்தங்களில் மாற்றம்!
பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு…
வவுனியா, நெளுக்குளம் – பாலாமைக்கல் பகுதியில் தோட்டக்காணி ஒன்றின் கிணற்றினுள் இன்று காலை (06.08)சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. வேப்பங்குளம் 60 ஏக்கர் பகுதியை சேர்ந்த ஆசிரியரான கிருஷன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீதியால் சென்றவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் ஆசிரியரான என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் முடங்கிய தகவல் தொழில்நுட்ப துறை!
சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, பல நாடுகளில் விமான சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ள நிலையில் லண்டன் பங்குச்