நாசாவின் வரலாற்று முயற்சி: 2026ல் சந்திரனை நோக்கி மனிதர்கள் – Artemis 2 திட்டம் அறிவிப்பு!
வாஷிங்டன் – நாசா (NASA), 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனை நோக்கி விண்வெளிப் பயணிக்கும் வரலாற்று முயற்சிக்கு தயாராகி வருகிறது. Artemis 2 எனப்படும் இந்த மிஷன், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஏவுதலுக்கான பல்வேறு நாள்களை கொண்டு உள்ளது. முதற்கட்டமாக, பிப்ரவரி 5 ஆம் திகதி இரவு இந்தப் பயணத்தை ஆரம்பிக்க
பூமி மீது மோதும் விண்கற்கள் – தடுப்பதற்கான நாசாவின் புதிய திட்டம்!
சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து நாசா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. அவ் ஆவணப்படத்தில் விண்கற்கள் மோதலை எதிர்கொள்ள 3 நடவடிக்கைகளை பின்பற்றுவதாக குறிப்பிட்டிருக்கிறது. இதன்
புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ள நாசா!
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியது என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. முக்கியமாக, புதிய கிரகத்தில் கணிசமான அளவு வைரங்கள் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். கிரகத்தின் நிறை, மூன்றில் ஒரு பங்கு வைரங்களால்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் சிக்கல்!
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மீண்டும் சிக்கல் நிலவுவதாக நாசா தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் “க்ரூ” 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.56ற்கு விண்கலம் விண்ணில் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஏவுதளத்தில் இருந்த இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த தாமதம்
2032 இல் பூமியைத் தாக்கவுள்ள சிறுகோள்…விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!
2024 YR4 எனப் பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் எதிர்வரும் 2032 ஆம் ஆண்டு பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 196 டி விட்டம் கொண்ட இந்த சிறுகோள் 2028 ஆம் ஆண்டு பூமிக்கு மிகவும் அருகில் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சிறுகோள் பூமியைத் தாக்கும் பட்சத்தில் 8 மெகா தொன் ஆற்றல் வெளிப்படும் என நாசா கணித்துள்ளது.
ISS விண்வெளி நிலையத்தை பசுபிக் கடலில் தள்ள திட்டமிட்டுள்ள நாசா: கைகோர்த்த எலான் மஸ்க்…!!
பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ISS விண்வெளி நிறுவனம், இதனை பசுபிக் பெருங்கடலில் தள்ளப்போவதாக நாசா அறிவித்துள்ளது. சர்வதேச விண்வௌியின் ஆயுட்காலம் முடிவடையவுள்ள நிலையில் அதனை அழிக்கும் நோக்கில், எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தமொன்றை போட்டுள்ளது. அதன்படி இன்னும் 10 ஆண்டுகளில் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3இலட்சம் கிலோ எடையுள்ள விண்வெளி
பூமியை தாக்கவுள்ள சூரியப் புயல்! நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
மிதமான சூரியப் புயல் பூமியைத் தாக்கலாம் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூரியப் புயல் தாக்கமானது 2017ஆம் ஆண்டிற்குப் பின் பூமியில் ஏற்படவுள்ள மிக வலுவான தாக்கம் என நாசா குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
செவ்வாய் கிரகத்திற்கு 2 மாதங்களில் செல்லலாம்; நாசாவின் அறிவிப்பு…
இரண்டு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய கூடிய புதிய விண்கலம் ஒன்றை நாசா தயாரித்து வருகின்றது. நாசாவின் புதிய திட்டத்தின் படி தயாரிக்கப்படும் விண்கலம் இரண்டு மாதங்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேற்படி பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலம் (Pulsed Plasma Rocket/PPR) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் தயாரிப்பு வேலைக்காக Howe Industries நிறுவனத்திற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது.
மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு !!
வானியலாளர்களின் இரண்டு சர்வதேச குழுக்கள் 40 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது. Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்தக் கிரகமானது மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து நாசா நடத்திய ஆராய்ச்சியின் பலனாக இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் 2022இல் ஏற்பட்ட வெப்பத்தைப் போன்ற நிலை இந்தக் கிரகத்திலும் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இலங்கையர்..!
அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள் செல்வதற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த உருவகத்துக்குள் வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்பதற்கு ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி ஜேசன்