நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானதா?? – சஜித் பிரேமதாச!
எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌ்ளிக்கிழமை (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். என்றாலும், எங்களுடன் ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து
கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: வயற்காணிகள் விடுவித்தல் மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் விவாதம்!
கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது. இக் கூட்டமானது கரைச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வனஜீவராசிகளால் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டதனால் எல்லைக்குள் உள்ளடக்கப்பட்ட 200 ஏக்கர் வயற்காணிகளை விடுவித்தல் மற்றும் மத்திய வகுப்புத்திட்ட காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் வழங்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வனஜீவராசிகள் திணைக்களத்தினரை இது
செம்மணிப் போராட்டத்தில் குழப்பம்: அரசியல் இலாபத்துக்காக சிலர் இதை செய்கிறார்கள்– எம்.பி. க. இளங்குமரன் கண்டனம்!
செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே சிலர் குழப்பங்களை விளைவித்திருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானது எனவும் அதனை திட்டமிட்டு குழப்புவதற்காக கிளிநொச்சியிலிருந்து குழுவொன்று செம்மணிக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக
எம்.பி. பதவிக்கு தகுதியற்றவரா அர்ச்சுனா? –இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பம் !
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது பதவியைத் தொடர தகுதியற்றவர் எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட ‘குவோ வாரண்டோ ரிட்’ மனுவின் விசாரணை இன்று (26.06.2025) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது. இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹெராத் தாக்கல் செய்துள்ளார். இராமநாதன் அர்ச்சுனா அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றிக்கொண்டே 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில்
இலங்கை-கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனுர கருணாதிலகா நியமனம்!
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை-கனடா நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அறிக்கையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராட்சி சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 06.06.2025 நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சங்கத்தின் மறுமலர்ச்சி கூட்டத்தின் போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின்
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக ITAK வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு!
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். தனது x தளத்தில் இதனை தெரிவித்துள்ளார். சிவம் பாக்கியநாதன் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறினார். மேலும் “ஒரு ஆச்சரியமான
சுற்றுச்சூழல் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஹெக்டர் அப்புஹாமி நியமனம்!
சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் வள நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜூன் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தின் போது இந்தத் தெரிவு நடைபெற்றது. அவரது வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் முன்மொழிந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேஷன் வழிமொழிந்தார். சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன்,
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்; நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!
1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்கான தனிநபர் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். அதற்கமைய, இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வழிமொழிந்தார். இந்த தனிநபர் சட்டமூலம் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி வர்த்தமானியினூடாக வெளியிடப்பட்டது. தாமதமான மாகாண சபைத்
தேனீ கொட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் – அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் ரவிகரன் எம்.பி..!
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78ற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார். அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக் கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை மிகக் கடுமையாக
பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் பறிபோகும் உயிர்கள் – சுட்டிக்காட்டிய கம்மன்பில!
பாதாளக் குழுக்களின் துப்பாக்கிச்சூட்டினால் இதுவரையில் 30 இற்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமயவின் கொழும்பு காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.05.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கும், மனித படுகொலைகளுக்கும் நேரடி தொடர்புண்டு என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது