Monday, March 16, 2026
No menu items!

நானாட்டான்

மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் கோர விபத்து; சிறுவன் பலி!

மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில், மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை ,தாய்,மகன் மற்றும் மகள்...

மன்னார் சுயாதீன இளைஞர் சுயேட்சை குழு ஜனநாயக தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவு!

மன்னார் -நானாட்டான் பிரதேச சபையில் சுயாதீன இளைஞர் குழுவாக போட்டியிட்ட சுயேட்சை குழுவினர் தமது ஆதரவை ஜனநாயக தமிழ் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக சுயாதீன இளைஞர் குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன் தெரிவித்தார். மன்னாரில்  இன்றைய தினம் (6) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பல கட்சிகள் தங்களிடம் ஆதரவு கோரி இருந்த...

கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து – கடை முற்றாக எரிந்து நாசம்..!

முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (17/04/2025) மாலை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அந்த கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது. அந்த கடைக்கு உள்ளே நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வண்டிகளும் முற்றாக எரிந்துள்ளதாக தெரிய வருகிறது. அருகில் உள்ள ஆலயத்தில் பெரிய...

வெள்ள அபாயத்தில் பல கிராமங்கள் – மக்களுக்கு எச்சரிக்கை..!

மன்னார் மாவட்டத்தில்  அருவியாற்றினை  அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு  மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.   மன்னார் மாவட்டத்தில் நேற்று (20/1/2025) தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்...

மன்னாருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை-அச்சத்தில் மக்கள்…!

மல்வத்து ஓயா குளத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பெய்து வரும் குறிப்பிடத்தக்க மழை காரணமாக தந்திரிமலையிலிருந்து கீழ்பகுதியில் உள்ள ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலை, நானாட்டான் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள...

நானாட்டான் பிரதேசத்தில் இரு வான்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினை – கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு..!

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வாழ்க்கை பெற்றான் கண்டலில் இரு குளங்களுக்கு இடையில் காணப்படும் வான் பிரச்சினை குறித்து பாதிக்கப்பட்ட பொன்தீவு கண்டல் கமக்கார அமைப்பு நேற்றைய தினம் வியாழக்கிழமை (28.11.2024) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தமது பிரச்சினையை முன் வைத்தனர். இதன் போது...

மேய்ச்சல் தரை பிரச்சினை குறித்து கால்நடை வளர்ப்பாளர் சங்க பிரதிநிதிகள் முறைப்பாடு…

நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்களுக்கு மேய்ச்சல் தரவைக்கு என ஒதுக்கப்பட்ட கட்டுக்கரை குளம் புல்லறுத்தான் கண்டல் பகுதியில் சிலர் அடாத்தாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். நானாட்டான் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் களின் நீண்ட கால பிரச்சினையாக மேய்ச்சல் தரை...

மன்னாரில் சாத்திரம் பார்ப்பதாக கூறி சுய நினைவை இழக்கச் செய்து 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை திருட்டு…!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றுக்குச் சென்று சாத்திரம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை (நகை) திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம்...

மன்னார் – நானாட்டானில் இடம் பெற்ற  மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி…

மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்றைய தினம் (23.10)  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணி ஆனது  நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நானாட்டான் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை 9.30 மணியளவில்  முருங்கன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டு நானாட்டான் சுற்று வட்டத்தின்...

மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது…!

மன்னார்- முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நானாட்டான் பிரதேசத்தில் மதுபானம் அருந்தி  உந்துருளி செலுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  முருங்கன்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (06.09)  நானாட்டான் சுற்றுவட்ட சந்தியில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்டவர்களில் அரிப்பு துறை மற்றும்  நானாட்டான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவரும் குடும்பஸ்தர்கள்  என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights