Monday, March 16, 2026
No menu items!

நாமல் ராஜபக்ச

வழிபாட்டுத் தலங்களை மீளமைக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறார் நாமல்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடு முழுவதும் சேதமடைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களை மீளமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மத்திய, ஊவா, வடமேல், சபரகமுவ, மேல், தென், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏராளமான பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை...

அச்சுறுத்தலால் எங்களை அடக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் (SLPP) அரசியல் பயணத்தை எந்தவித அச்சுறுத்தலாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், SLPP கட்சியின் உறுப்பினருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் SLPP...

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகிய நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (நவம்பர் 19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் – நாமல் ராஜபக்ச..!!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

நாமல் ராஜபக்சவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எக்ஸ் பதிவொன்றில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்...

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம்; பெட்ரிக் பிரவுன்!

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை வெளியிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...

எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. இது வெறும் ஆரம்பம்; நாமல் ராஜபக்ச!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது. சிலர் பொய்யான வாக்குறுதிகளை நம்பியிருந்தாலும், மக்களை...

பலாலி வீதி திறந்ததை குறித்து அரசாங்கத்தின் மீது கோபமடைந்த நாமல்!

தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடபகுதி மக்களின் உணர்வுகளுடன்  அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும். பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை  உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி...

நாமலுக்கு எதிராக CID விசாரணை ஆரம்பம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரி பரீட்சைக்கு மோசடியாக தோற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை சட்டக் கல்லூரி தேர்வுகளின் போது நாமல்...

பிரிட்டன் விதித்த தடை குறித்து ஆவேசத்துடன் அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!

இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரகுமாரதிசநாயக்கவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த நாடு இலங்கை,ஆனால் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நிதி வழங்கி அவர்களின் ஈவிரக்கமற்ற தன்மையை நியாயப்படுத்தியவர்களை புறக்கணித்தபடி மேற்குலகம் எங்களின் முன்னாள் போர்வீரர்களை தெரிவு செய்து இலக்குவைக்கின்றது. பிரிட்டனின்...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights