ஜனாதிபதி செயலகத்தை நோக்கி அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட நெதர்லாந்து நாட்டவர் கைது!
காலி முகத்திடலிலிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி அனுமதியின்றி ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 56 வயதான சந்தேக நபர், விமானப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தற்போது, கோட்டை காவல்நிலைய பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் திரு திலீப சி. பெரேராவின்
இலங்கை கிராமப்புற பால திட்டத்திற்கு €730,000 கூடுதல் மானியம் ஒதுக்கிய நெதர்லாந்து !
இலங்கையில் நடக்கும் 162 கிராமப்புற பாலங்கள் கட்டுமான திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு €730,000 கூடுதல் மானியத்தை ஒதுக்கியுள்ளது. இந்த மானியம் திட்டத்தின் கூடுதல் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். செப்டம்பர் 2025 நிலவரப்படி, திட்டம் 96% இயற்பியல் முன்னேற்றத்தை அடைந்துள்ளது; 151 பாலங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. பிப்ரவரி
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையை பார்வையிடச் சென்ற வடக்கு மாகாண ஆளுநர்!
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (06.06.2025) நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநரை நேற்று வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் தேவைகள் மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்..!
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள 4 சிகிச்சை நிலையங்களின் செயற்பாடுகளையும் வினைத்திறனுடன் இயங்கவைப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (17.03.2025) இடம்பெற்றது. பருத்தித்துறை ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை, மாங்குளம் ஆதார மருத்துவமனை, வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியனவற்றில் விசேட சிகிச்சை நிலையங்கள்
ஜனாதிபதியினை சந்தித்த நெதர்லாந்து தூதுவர்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) ஆகியோருக்கு இடையில் இன்று (27) சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையின் துறைமுகங்களை அண்மித்த முதலீடுகளுக்கு நெதர்லாந்து ஆதரவளிக்க தயாராக உள்ளதென இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பஷ் (Bonnie Horbach) தெரிவித்தார். இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையில்
5 சதவீதமான ஊழியர்களை பணி நீக்கம் செய்த மெட்டா!
மெட்டா நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணி நீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி மார்க் சக்கர்பர்க் தலைமையிலான அந்நிறுவனம் அடுத்த வாரம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நிறுவனம் சமீபத்தில் குறைந்த செயல்திறன் கொண்டவர்களில் 5 சதவீதமான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இது தொடர்பில் வெளியான அறிக்கையின்படி,
கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் இலங்கைக்கு கிடைத்த இடம்?
2025 ஆம் ஆண்டுக்கான கடவுச்சீட்டு தரவரிசையில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பட்டத்தை சிங்கப்பூர் மீண்டும் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் உலகளவில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவுகளைப் பயன்படுத்தி விசா
வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும். அதன்படி, இந்தியாவிலிருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து
இரண்டு கோடி பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!
நெதர்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 3,585 மதுபான போத்தல்கள் அடங்கிய கொள்கலன் கொழும்பு துறைமுகத்தில் வைத்து சி.ஐ.சி.ஐ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சரக்கு முனையத்தில் கைவிடப்பட்ட நிலையில், இலங்கை சுங்கத்தின் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவு பொறுப்பேற்றதாக சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருபது அடி கொள்கலனில் விஸ்கி மற்றும்
பிரித்தானியாவில் பரவும் புதிய வகையான வைரஸ்…!
பிரித்தானியாவில் கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான ‘ப்ளூடங்’ (Bluetongue) என அழைக்கப்படும் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல எனினும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. பிரித்தானியாவின் நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ (Haddiscoe) என்ற இடத்தில் ஒரு ஆடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த