படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்; பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்; கணவன் கைது!
படுக்கையிலேயே இறந்து கிடந்த பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்று (15) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டவர் தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரே குழந்தையின் தாயாவார். அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவ சேவைகள் அதிகாரியாகப் பணிபுரிந்து
மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் ரயில் மோதியதில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (8) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சுந்தரராஜா நிசாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் சம்பவதினமான இன்று அதிகாலை 1.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் இருந்துள்ள நிலையில் மட்டு
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 38 வயது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவருக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். திக்கோடை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம்
சந்தேகத்திற்கிடமான முறையில் 7 வயது சிறுமி உயிரிழப்பு..!
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம பகுதியில், உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று (09) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியை பரிசோதித்த பசறை வைத்தியசாலையின் வைத்தியர், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இந்த சம்பவம் தொடர்பாக
ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த நபர் மரணம்!
ஹபரண – திருகோணமலை பிரதான வீதியில் ஹபரண பகுதியில் ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து, ஹபரண நகரப் பகுதியைக் கடந்து சென்றபோது, ஏப்ரல் 11 ஆம் திகதி மதியம் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்டவர் தெளிவற்ற சூழ்நிலையில் பேருந்தின் முன் கதவிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு – சடலத்தைத் தோண்டி எடுக்க உத்தரவு!
வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சடலத்தை மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி, அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையைப் பரிசீலித்த
சில நாட்களுக்கு முன்பு இறந்த தம்பதியினரின் சடல்ங்கள் மீட்பு!
பகவந்தலாவ காவல் பிரிவுக்கு உட்பட்ட தெரேசியா தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், சில நாட்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் திருமணமான தம்பதியினரின் சடலத்தை பலவந்தலாவ போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர்கள் சின்னையா விஜேகுமார் (39) மற்றும் பெருமாள் கௌரி (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் திகதி முதல் தனது சகோதரனையும் மனைவியையும் காணவில்லை என்றும், வீட்டைத் திறந்தபோது
மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்..!
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று (06.03.2025) வீடொன்றின் பின்புறமாக கைவிடப்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக தடயவியல் பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் மற்றும் சேயின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பு…
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19.11.2024) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (19.11.2024) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சிசுவும் உயிரிழந்துள்ளார்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவரும் சிசுவும் உயிரிழந்தமையை அடுத்து அங்கு நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. மன்னார் – பட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வைத்தியசாலை தரப்பினரின்