வாகரை பகுதியில் மனைவியை கொலை செய்த கணவன்!
வாகரை பொலிஸ் பிரிவின் உரியங்கட்டுவ பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர் தட்டமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் தெரியவந்ததாவது, இளம் மனைவியும் அவரது கணவரும் இடையே ஏற்பட்ட தகராறில், கணவர் மின்விசிறி கம்பியால் தனது மனைவியின் கழுத்தை நெரித்து
பொலிஸார் மீது 9,000 முறைப்பாடுகள் பதிவு!!!!
பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை WhatsApp வழியாக பதிவு செய்யலாம். பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட WhatsApp இலக்கம் வழியாக இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை உடனடியாக தெரிவிக்க, பொலிஸ் மா.அதிபர் பிரியந்த வீரசூரிய 071-8598888 எனும் WhatsApp எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளையில் அடையாளம் தெரியாத நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு!
பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இருந்து இன்று (18) காலை மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். நான்கு நாட்களுக்கு பின்னர் வயலின் உரிமையாளர் வயலுக்குச் சென்றுள்ள நிலையில், இதன்போது அந்த நபரின் சடலத்தை பார்த்து, பின்னர் பொலிஸுக்கு தகவல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, பதுளை பொலிஸ் அதிகாரிகள்
ஆயிரக்கணக்கான குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம்!
7,880க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகமவில் புதிய பொலிஸ் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட உரையாற்றிய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
11 பேர் உயிரிழப்பு – விராட் கோலிக்கும் சிக்கல்
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்று முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது. இதையடுத்து, பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு அருகில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக வெற்றி கொண்டாட்டம் சோகத்தில் முடிந்திருந்தது. இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
பொலிஸ் காவலில் இருக்கும்போது மற்றும் பொலிஸாருடன் ஏற்படும் மோதல்களின் போது ஏற்படும் மரணங்களைத் தடுப்பது தொடர்பாக பொது வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதலாம் இலக்கத்தின் கீழ் இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட
மட்டக்களப்பில் பொலிஸ் பதிவு நடவடிக்கை ஆரம்பம்..!
மட்டக்களப்பில் மீண்டும் பொலிஸார் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான விண்ணப்பபடிவங்களை வீடு வீடாக சென்று வழங்கும் நடவடிக்கையினை இன்று சனிக்கிழமை (08/03/2025) ஆரம்பித்துள்ளதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தோற்றியுள்ளது. 1865 ம் ஆண்டு 16 ம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76ம் பிரிவிற்கமைய வீடுகளில் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கி இருப்போரின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான தலைப்பிலான இந்த விண்ணப்பப்
கடத்தப்பட்ட சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் வெளியிட்டுள்ள தகவல்!
கம்பளை தவுலாகல பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்க முற்பட்ட இளைஞர் ஒருவர் மீட்கும் முயற்சியில் பல காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அந்த இளைஞர், தான் ஓரளவு வாகனத்தில் ஏறி, சிறுமியை விடுவிக்க முயன்ற கடத்தல்காரர்களுடன் சண்டையிட்டதாக கூறினார். கடத்தப்பட்ட போது வாகனத்தின் பின்புறத்தில் மூன்று பேர் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் தொடர்ந்து ஓட்டிச் சென்றதாகவும்,
மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து ரோஹிங்கியா அகதிகள் மீட்பு; பொது பாதுகாப்பு அமைச்சர்!
பொலிஸ் மற்றும் இராணுவ விசாரணைகளின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் 100,000 இற்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் விரைவில் இலங்கைக்கு வரக்கூடும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அண்மையில், மனித கடத்தல்காரர்களுக்கு மில்லியன் கணக்கில் பணம் கொடுத்து 116 ரோஹிங்கியா அகதிகள் முல்லைத்தீவில் இருந்து மீட்கப்பட்டனர். அரசாங்கம் குழுவிற்கு தேவையான வசதிகளை வழங்கி வருகிறது மற்றும்
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!
பண்டிகைக் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுமார் 150,000 Breath Analyzers விநியோகிக்கப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் இன்று (24) பயணிகள் போக்குவரத்து பஸ்கள்