Monday, March 16, 2026
No menu items!

மல்லாகம்

வடக்கு, கிழக்கில் அதிகரித்து வரும் வெடிபொருள் மீட்பு சம்பவங்கள்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றை பண்படுத்தும் பணியின் போது வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன், குறித்த வெடிபொருட்கள் இன்று அகற்றப்படவுள்ளதாக...

பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது!

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யடுள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம்பெற்றது. இது தொடர்பில் தெரியவருகையில், வழமைபோன்று பகல் வீதி கண்காணிப்பு நடவக்கைகளுக்காக கொஸ்தாபசு ஹரிதாஸ் தலைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் நாரந்தனை பகுதியில்...

யாழ் சுன்னாகத்தில் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு இளைஞர் ஒருவர் கைது!

யாழ் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதே மாத்திரைகளை சுன்னாகம் பொலிசார் நேற்று (8) இரவு கைப்பற்றினர். யாழ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகர்பகுதியில் போதைமாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக குறித்த பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு விரைந்த...

யாழில் 9 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி மற்றும் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இருவர் நேற்றிரவு, இணுவில் தியேட்டரடியில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்களிடமிருந்து 9 கிலோ 794 கிராம் எடையுடைய கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவரும் சுன்னாகம் பொலிஸ்...

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களின் பின் கைது..!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருவதாக வெளியுலகுக்கு நம்ப வைத்துக்கொண்டு , இரவு வேளைகளில் மனைவி பிள்ளைகளை சந்திக்கச் சென்ற நிலையில்...

பெருமளவான கசிப்பு மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது!

நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவேளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு உற்பத்திக்கு...

பாடசாலையொன்றில் சிறுமிக்கு நேர்ந்த கதி!!!

யாழ். மானிப்பாய் பிரபல பாடசாலையில் தரம் 5க்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாடசாலையில் பிரத்தியோக வகுப்பு நடாத்திவரும் குறித்த ஆசிரியர் மாணவியுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில்...

சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு நேர்ந்த கதி….!

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடு...

மனைவியைன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவர்..!

அராலியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகாயத்தை ஏற்படுத்திய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கணவன் - மனைவி ஆறு வருடங்களாக பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில் வன்னியில் வசிக்கும் மனைவி, யாழ்ப்பாணம் - அராலியில் உள்ள அவரது அக்காவின் வீட்டிற்கு வந்து செல்வது வழமை. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான...

கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரின் சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து...
- Advertisement -spot_img

Latest News

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு எஞ்சியிருப்பதை காப்பாற்றிக்கொள்ளவும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, "தங்கள் நாட்டில் எஞ்சியிருப்பதை - அது ஒன்றும் பெரியதாக இல்லை - அதைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி...
- Advertisement -spot_img
Verified by MonsterInsights