சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்படையினர் இன்று (நவம்பர் 3) காரைநகர் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 31 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மூன்று படகுகளில் எல்லை தாண்டி வந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு
கடலில் மிதந்து வந்த போத்தலில் உள்ள திரவத்தை குடித்ததால் மீனவர்கள் இருவர் பலி!
புத்தளம், நரகலிய பகுதியில் கடலில் மிதப்பதைக் கண்டெடுத்த போத்தலில் இருந்து திரவத்தை குடித்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் மீன்பிடி தொழிலை சேர்ந்த நான்கு பேர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். மீதமுள்ள இரண்டு மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்
இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 47 இந்திய மீனவர்கள் கைது!
நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய கட்டளைகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வந்த ஐந்து படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும்
மன்னார் கடலில் ஏழு பேர் கைது..!!
இந்திய கடற்றொழிலாளர்கள் எழு பேரை மன்னார் கடற் பிராந்தியத்தில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். அவர்களின் படகொன்றையும் கைப்பற்றியதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இன்று பகல் கைதாகிய இந்திய கடற்றொழிலாளர்கள் எழுவரும் கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார். விசாரணைகளின் பின்னர் இந்திய கடற்றொழிலாளர்களை, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறாது அமைக்கப்பட்ட கலங்கட்டி மீட்பு!
கிளிநொச்சி மாவட்டத்தின் பல கடற்பிரதேசங்களில் சட்டவிரோத வலைகள் மற்றும் அனுமதிப்பத்திரம் பெறப்படாது அமைக்கப்பட்ட கலங்கட்டி தொழிலில் சில மீனவர்கள் ஈடுபடுகின்ற நிலையில் கடற்றொழில் சங்கங்கள் வைத்த முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் கிராஞ்சி பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பெருமளவு தங்கூசி வலைகள் மற்றும் கலங்கட்டி வலைகள் அவற்றின் தடிகள் என்பன மீட்கப்பட்டன. இவற்றிற்கு எவரும் உரிமை கோரவில்லை என்பதோடு
இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களும் ஒரு படகும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் 15 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும், தற்போது இராமநாதபுரம் மீன்வளத் துறைமுகத்தில் தங்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மீனவர்கள் தாங்கள் ஒரு விபத்தை சந்தித்ததாகவும், பின்னர் மற்றொரு மீன்பிடிக் கப்பல் மூலம் இந்தியாவின் இராமநாதபுரத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்..!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28/02/2025) காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையுடன் முடித்துக் கொண்ட மீனவர்கள் நேற்று (28/02/2025) இரவிலிருந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீனவர்கள் அதை ஏற்க மறுத்து
சட்டவிரோத மீன்பிடி – 17 மீனவர்கள் கைது..!
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது. இதனுடன்,
சீனா எம்மை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது -மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு!
இந்திய அத்துமீறிய இழுவைமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி சீனா, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் எம்மை பயன்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களில் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். இன்றைதினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்
இரண்டு படகுகளுடன் 14 இந்திய மீனவர்கள் கைது!
மீனவர்கள் கிளிநொச்சி – இரணைதீவை அண்மித்த கடற்பகுதியில் நேற்று இரண்டு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்கள்