தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் இலங்கையில்..!!
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம்(19) சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் , ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் , இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு
செம்மணி மனிதப் புதைகுழி: இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் ஜூலை 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும்!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 65
நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி கொழும்பில் போராட்டம்..!!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை இராணுவத்தால் fortfarande கைப்பற்றியுள்ள நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் (15) கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கோத்தா வீதியில், “எமது பூர்வீக நிலங்களை மீள எமக்கே ஒப்படையுங்கள்” எனக் கோரி, பூர்வீக நில உரிமையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோர்
செம்மணி- சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவு!
யாழ்ப்பாணம், செம்மணி- சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து, இரண்டாம் கட்ட அகழ்வின்போது மொத்தமாக 65 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், அவை அனைத்தும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மனித புதைகுழியின் முதலாவது குழியிலிருந்து 63 மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், இரண்டாவது குழியிலிருந்து இரண்டு எலும்புக்கூட்டு தொகுதிகளும் மீட்கப்பட்டதாக,
செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் அதிர்ச்சி: அத்திவார குழியிலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக அத்திவாரக் குழி நேற்று தோண்டப்பட்ட போதே, கூடுதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மழையுடனான காலநிலை காரணமாகவும், அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், வடிகால் கட்டமைப்புக்கான தொழில்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அந்த இடத்தில் மனித எச்சங்கள்
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு…..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனைபகுதியில் நேற்று (04.072025) இரவு 11:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது , கடற்படையினர் மற்றும் மருதங்கேணி பொலிசார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு விசேட சுற்றிவளைப்பு ஒன்று மாமுனை பகுதி முழுவதும் மேற்கொள்ளபட்டது இச் சுற்றி வளைப்பில் 38பொதிகள் அடங்கிய 71.400kg கேரளா
போதை மாத்திரைகள் விற்பனைக்காக வந்த கொழும்பு இளைஞர் யாழில் கைது – இரகசிய தகவலில் செயல்பட்ட புலனாய்வுப் பிரிவு!
யாழ்ப்பாணத்தில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் செயல்படும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்று வந்த வேளையில், சந்தேகநபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில்
வட்டுக்கோட்டையின் முக்கியத்துவத்தை குறைக்க திட்டமிட்ட முயற்சியா? கலாநிதி சிதம்பரமோகன் கேள்வி!
வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாண மாவட்டத்தில்முக்கிய இடமாக விளங்கிய வட்டுக்கோட்டை திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றதா? என்ற ஆச்சரியத்தையும் கவலையையும் கலாநிதி சிதம்பரமோகன் வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற வலிகாமம் மேற்கு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கருத்தில் தொடர்ந்து அவர், சங்கானையை நகர சபையாக உயர்த்த வேண்டும் என்றும், வட்டுக்கோட்டையை
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியில் விபத்து; ஒருவர் பலி!
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியின் கட்டுகஸ்தோட்டை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். சம்பவத்தில் 58 வயதுடைய பரகொட,
யாழில் கடத்தப்பட்ட யுவதி – வெளியான பின்னணி..!
யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடத்தப்பட்ட யுவதி, 22 வயதான இளைஞர் ஒருவரை பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்து தலைமறைவாக இருந்து வந்ததாகவும், அண்மையில் அவர்களின் இருப்பிடம் அறிந்த பெற்றோருக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததாகும் அதன் அடிப்படையில்